NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம்'-வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம்'-வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் 
    'இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம்'-வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன்

    'இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம்'-வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் 

    எழுதியவர் Nivetha P
    Dec 18, 2023
    08:13 pm

    செய்தி முன்னோட்டம்

    குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கால்வாய்கள், குளங்கள் நிரம்பியதால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

    அதில் அவர், 'தற்போதைய மழைக்கு மேக வெடிப்பு காரணம் இல்லை. வளி மண்டல சுழற்சியே காரணம்' என்று தெரிவித்துள்ளார்.

    மழை 

    4 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடருகிறது

    மேலும் அவர், குறிப்பிட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

    தொடர்ந்து அவர், காலநிலை மாற்றத்தால் இதுபோன்ற கனமழையை இனிவரும் காலங்களில் அடிக்கடி எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 14 இடங்களில் அதிகனமழை பெய்துள்ள நிலையில், காயல்பட்டினத்தில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 95 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை காயல்பட்டினத்தில் ஒரே நாளில் பெய்துள்ளதால் தூத்துக்குடியில் மழை நீர் வடிய தாமதமாகலாம் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ரயில் தண்டவாளம் 

    #Watch | தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரயில் தண்டவாளத்தின் அடித்தளம்

    திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் இப்பாதையில் வழக்கமாக செல்லும்#SunNews | #TrainTrack | #TutucorinRains | #TNRains pic.twitter.com/5PbKk1BKBt — Sun News (@sunnewstamil) December 18, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனமழை
    எச்சரிக்கை
    வெள்ளம்
    தூத்துக்குடி

    சமீபத்திய

    தாங்கள் உருவாக்கிய அதே AI அமைப்புகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் மைக்ரோசாஃப்ட்
    பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் சர்வதேச நாணய நிதியம்
    அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் தீபிகா படுகோன்! தீபிகா படுகோன்
    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்   மு.க.ஸ்டாலின்

    கனமழை

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் புயல் எச்சரிக்கை
    மிக்ஜாம் புயல் எச்சரிக்கை: KTCC மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு  விடுமுறை
    தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: அடுத்த 3 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    மிக்ஜாம் புயல்: யாருக்கெல்லாம் இன்று விடுமுறை? எந்தெந்த சேவைகள் இன்று இயங்காது? சென்னை

    எச்சரிக்கை

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளம்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு  தமிழ்நாடு
    அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள் தமிழ்நாடு

    வெள்ளம்

    டெல்லி: மீண்டும் ஆபாயக் குறியை தாண்டியது யமுனையின் நீர்மட்டம்  டெல்லி
    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 26 பேர் பலி, 40 பேரைக் காணவில்லை ஆப்கானிஸ்தான்
    சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி  சீனா
    உத்தரகாண்டில் கனமழை: கடும் வெள்ளத்தில் இடிந்து விழுந்த கல்லூரி கட்டிடம் உத்தரகாண்ட்

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு காவல்துறை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தமிழ்நாடு
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025