NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விழுப்புரம் கள்ளச்சாராய வழக்கு - 11 பேரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    விழுப்புரம் கள்ளச்சாராய வழக்கு - 11 பேரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
    விழுப்புரம் கள்ளச்சாராய வழக்கு - 11 பேரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

    விழுப்புரம் கள்ளச்சாராய வழக்கு - 11 பேரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

    எழுதியவர் Nivetha P
    May 24, 2023
    02:28 pm

    செய்தி முன்னோட்டம்

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதில் மரணமடைந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    மேலும் இந்த விவகாரம் குறித்து முன்னதாக காவல்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

    மேலும் இந்த வழக்கின் விசாரணையினை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த கள்ளச்சாராய வழக்கில் சம்பந்தப்பட்ட 12 பேர் மீது கொலை வழக்கினை பதிவு செய்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அனுமதி 

    மாவட்ட நீதிமன்றத்தில் அனுமதி கோரிய சிபிசிஐடி 

    சிபிசிஐடி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 12 பேரில் 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், மதன் என்னும் நபரை சிபிசிஐடி போலீசார் குழுக்கள் அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்நிலையில் இந்த கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 பேரை தங்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் அனுமதி கோரினர்.

    அதனை தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த 11 பேரினை சிபிசிஐடி காவலில் 3 நாட்களுக்கு எடுத்து விசாரிக்க விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவினை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிபிசிஐடி
    மு.க ஸ்டாலின்
    விழுப்புரம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சிபிசிஐடி

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு

    மு.க ஸ்டாலின்

    கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு - தமிழக முதல்வர் தனித்தீர்மானம்  மத்திய அரசு
    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா
    சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  சென்னை
    முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது: பாஜக  தமிழ்நாடு

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் போராட்டம்
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம் மனித உரிமைகள் ஆணையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025