NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள்
    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள்
    இந்தியா

    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள்

    எழுதியவர் Nivetha P
    February 13, 2023 | 08:34 pm 0 நிமிட வாசிப்பு
    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள்
    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள்

    விருதுநகர், வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் 35ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு அகழாய்வின்போது இங்கே நுண் கற்காலம் முதல் இடைக்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள சுமார் 25ஏக்கர் பரப்பளவில் தொல்லியல்துறையினர் கடந்த ஆண்டு மார்ச் 16ம்தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளத்துவங்கினர். அங்கு 16 குழிகளில் பல்வேறு அரியபொருட்கள் தற்போது கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது. சுடுமண்ணாலான பகடைக்காய், ஆட்டக்காய்கள், சங்கு வளையல்கள், முத்துமணிகள், காளை உருவம், சூடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், சுடுமண்ணாலான மனிதனின் தலை உருவம் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதேபோல காதணிகள், தங்க அணிகலன், பழங்கால பாசிமணிகள் உட்பட 3,254 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

    2ம் கட்ட அகழாய்வு பணி இம்மாத இறுதியில் மீண்டும் துவங்கவுள்ளதாக தகவல்

    இந்த முதற்கட்ட அகழாய்வு முடிவில் சங்கு வளையல்கள் இங்கு தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் மற்றும் அதனை கடல்வழியாக வெளிநாடுகளுக்கு வணிகம் செய்ததற்கான ஆதாரங்கள் முதலியன கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த முதற்கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி நிறைவடைந்தது என அறிவிக்கப்பட்டது. மேலும் இங்கு கண்டறியப்பட்ட செப்பு நாணையங்கள் ஆப்கன் நாட்டுடனான வர்த்தக உறவை எடுத்துக்காட்டு விதமாகவும், அதற்கான அடையாளமாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தொடர்ந்து பல்வேறு முத்திரைகள் இருப்பதால், அங்கு வெவ்வேறு குழுக்கள் வந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த 16 இடங்களில் தீ மூலம் ஏதோ செய்துள்ளதாக சான்றும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் 2ம்கட்ட அகழாய்வுப்பணி இம்மாத இறுதியில் மீண்டும் துவங்கவுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    விருதுநகர்
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    விருதுநகர்

    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று நீரிழிவு நோய்
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது பியூஷ் கோயல்
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை  தமிழ்நாடு
    சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி  கோவில்கள்

    தமிழ்நாடு

    2000 பேருக்கு வேலை! நிசான் கார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்; தொழில்நுட்பம்
    வடக்கன்ஸ் பற்றிய விஜய் ஆண்டனியின் ட்வீட் வைரல்! வைரல் செய்தி
    கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம் மாவட்ட செய்திகள்
    ஈரோடு இடைத்தேர்தல் - 19ம் தேதி முதல் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் ஈரோடு

    மாவட்ட செய்திகள்

    நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர் கோவை
    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் கோவை
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை கன்னியாகுமாரி
    வேலூரில் சிறப்பு தேவை குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச முடித்திருத்தம் தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023