NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புல்வாமா தாக்குதலின் 4ஆம் ஆண்டு நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    புல்வாமா தாக்குதலின் 4ஆம் ஆண்டு நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி
    39 வயதான ஆல்வி ஏற்கனவே அவரது சகோதரர்கள் மசூத் அசார் மற்றும் அப்துல் ரவூப் அஸ்கர் ஆகியோருடன் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்னர்.

    புல்வாமா தாக்குதலின் 4ஆம் ஆண்டு நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி

    எழுதியவர் Sindhuja SM
    Feb 14, 2023
    10:25 am

    செய்தி முன்னோட்டம்

    2019ஆம் ஆண்டு இதே நாளில், பாதுகாப்புப் படையினரின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை தற்கொலைப் படை பயங்கரவாதி செலுத்தியதில் குறைந்தது 40 CRPF வீரர்கள் உயிரிழந்தனர்.

    பஹவல்பூரில் உள்ள மசூத் அசார் தலைமையிலான பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியது.

    3 ஆண்டுகளுக்கு முன்பு புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று(பிப் 13) அஞ்சலி செலுத்தினார்.

    "இதே நாளில் புல்வாமாவில் நாம் இழந்த நமது வீரர்களை நினைவு கூர்வோம். அவர்களின் உன்னத தியாகத்தை என்றும் நாம் மறக்க மாட்டோம். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர்களின் தைரியம் நம்மை ஊக்குவிக்கிறது" என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.

    இந்தியா

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய அரசு

    பாலகோட்டில் உள்ள ஜபா டாப் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி, புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியது. அப்போது இந்தியா ஜெய்ஷின் பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழித்தது.

    வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும், அங்கு 300க்கும் மேற்பட்ட மத பயங்கரவாதிகள் இருந்ததாக படங்கள் காட்டுகின்றன.

    நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், மசூத் அசார் பாகிஸ்தானிய அரசின் பாதுகாப்பில் தொடர்ந்து சுதந்திரமாக இருந்து வருகிறார்.

    கடந்த ஆண்டு, சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் அவரது சகோதரர் மொகிதீன் ஔரங்கசீப் ஆலம்கிர் என்கிற அம்மார் அல்வியை மத்திய அரசு தனிப்பட்ட பயங்கரவாதியாக அறிவித்தது.

    அல்வி, ஜெய்ஷ் அமைப்பின் மூத்த தலைவர் மற்றும் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர் ஆவார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! தொழில்நுட்பம்

    இந்தியா

    தமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தமிழ்நாடு
    டெல்லியில் 17 வயது பணிப்பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியருக்கு வேலை பறிபோனது டெல்லி
    ரியல்மி 10 Pro 5G கோகோ-கோலா எடிஷன் - ஸ்மார்ட்போனின் சிறப்புகள்; ரியல்மி
    இந்தியாவில் டிக்டாக் அலுவலகம் ஒட்டுமொத்தமாக மூடல்! திடீர் அறிவிப்பு; தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025