NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள்
    இந்தியா

    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள்

    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 31, 2023, 10:35 am 0 நிமிட வாசிப்பு
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள்
    சிறிய விரிசல்கள் உள்ள மற்றும் "பாதுகாப்பான" நிலத்தில் அமைந்துள்ள வீடுகள்/கட்டிடங்களை மறுசீரமைக்க நிதி வழங்க DM முன்மொழிந்துள்ளது.

    சாமோலி மாவட்ட நீதிபதி ஹிமான்ஷு குரானா நேற்று(ஜன 30) புதைந்து கொண்டிருக்கும் ஜோஷிமத்தில் இடம்பெயரும் மக்களை குடியேற்ற மூன்று வழிகளை பரிந்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தில் பணிபுரியும் குழுவின் தலைவரான குரானா, கூடுதல் தலைமைச் செயலாளர் ஆனந்த் வர்தன் தலைமையிலான உயர் அதிகாரக் குழுவிடம் தனது பரிந்துரைகளை சமர்ப்பித்திருக்கிறார். இந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் 3 தீர்வுகளை கீழே காணலாம்: முதல் தீர்வு பாதிக்கப்பட்ட நிலம்/கட்டிட உரிமையாளர்களுக்கு நிதி உதவி வழங்குவது. இதன் மூலம், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி சேதமடைந்த நிலம் அல்லது கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். ஆனால், அவர்கள் முழுமையான இழப்பீட்டை பெறுவதற்கு முன், அவர்களின் நிலம்/கட்டிடம் மாநில அரசுக்கு ஆதரவாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    இரண்டாவது மற்றும் மூன்றாவது தீர்வுகள்

    இரண்டாம் தீர்வு பாதிக்கப்பட்ட சொத்தின் உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலம், வீடு கட்டுவதற்கும் பாதிக்கப்பட்ட கட்டிடத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கும் வழங்கப்படும். 100 சதுர மீட்டருக்கு மேல் நிலம் இருந்தால், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு விதிமுறைகளின்படி மீதமுள்ள நிலத்திற்கு பணம் வழங்கப்படும். ஆனால், அவர்கள் இந்த 100 சதுர மீட்டர் நிலத்தை பெறுவதற்கு முன், அவர்களின் நிலம்/கட்டிடம் மாநில அரசுக்கு ஆதரவாக பதிவு செய்யப்பட வேண்டும். மூன்றாம் தீர்வு பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக அடையாளம் காணப்பட்ட இடத்தில் அதிகபட்சமாக 75 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு கட்டிடம் கட்டப்படும். அவர்களின் சொத்தை விட வழங்கப்படும் கட்டிடம் குறைவான மதிப்பை கொண்டிருந்தால். மீதமுள்ள சொத்து மதிப்பிற்கு இழப்பீடு பணமாக வழங்கப்படும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    உத்தரகாண்ட்

    சமீபத்திய

    மீண்டும் அணிக்கு திரும்பும் முன்னாள் கேப்டன் முகமது நபி : ஆப்கான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு டி20 கிரிக்கெட்
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு விமானப்படை
    பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
    மகளிர் ஐபிஎல் 2023 : ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி! புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்! மகளிர் ஐபிஎல்

    இந்தியா

    இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடாகாவிற்கு வர இருக்கும் பிரதமர் மோடி மோடி
    10ல் 3 பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகின்றனர்: ஆய்வில் தகவல் இந்தியா
    IQOO Z7 5G : புதிய அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்! ஸ்மார்ட்போன்
    7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து உச்ச நீதிமன்றம்

    உத்தரகாண்ட்

    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023