NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையினை ரூ.4,500 கோடிக்கு விற்க முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையினை ரூ.4,500 கோடிக்கு விற்க முடிவு 
    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையினை ரூ.4,500 கோடிக்கு விற்க முடிவு

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையினை ரூ.4,500 கோடிக்கு விற்க முடிவு 

    எழுதியவர் Nivetha P
    Jun 22, 2023
    07:39 pm

    செய்தி முன்னோட்டம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த தாமிர உருக்காலையான ஸ்டர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு விதிமீறல் காரணமாக தமிழக அரசால் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டது.

    இது குறித்து வழக்குகள் தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆலை தொடர்ந்து 5 ஆண்டுகள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலையினை விற்பனை செய்து விடலாம் என்று வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    முன்னதாக 2021ம் ஆண்டு ஆலையினை விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் அந்த முடிவு கிடப்பில் போடப்பட்டது என்று கூறப்படுகிறது.

    விற்பனை 

    பல்வேறு கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் வேதாந்தா நிறுவனம் 

    தற்போது ஸ்டர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றும் பணியானது நடந்து வருகிறது.

    அங்கு நடக்கும் ஒவ்வொரு செயல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதோடு, அப்பகுதியினை சுற்றி காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    கழிவுகள் அகற்றும் பணி நிறைவடைந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து வேதாந்தா நிறுவனம் முடிவு செய்யும் என்று தெரிகிறது.

    அதன்படி ஆலையினை விற்பனை செய்யவும் இந்நிறுவனம் முயற்சி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

    ஏனெனில் பல்வேறு கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறது வேதாந்தா நிறுவனம்.

    இதனிடையே, ஸ்டர்லைட் ஆலையினை ஏலம் விட வங்கித்தரப்பு ரூ.4,500 கோடிக்கு விற்பனை செய்து நிதியினை திரட்ட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூத்துக்குடி
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு காவல்துறை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தமிழ்நாடு
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு

    காவல்துறை

    கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை கடற்கரை
    ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல் - லவ்ஜிகாத் விவகாரம் என சந்தேகம்  ஈரோடு
    சிபிஐயின் புதிய இயக்குநர்: யாரிந்த பிரவீன் சூட் இந்தியா
    சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சென்னை மாணவி  சென்னை

    காவல்துறை

    நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள்  நாகர்கோவில்
    போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்  போக்குவரத்து காவல்துறை
    கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - 2 பேர் கைது  கோவை
    உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025