Page Loader
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை 

எழுதியவர் Sindhuja SM
Jan 07, 2024
04:14 pm

செய்தி முன்னோட்டம்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஸ்டேயன் சவுத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். முர்ஷிதாபாத் கட்சியின் பொதுச்செயலாளர் ஸ்டேயன் சவுத்ரி காயங்களுடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேற்கு வங்க மாநிலம் பஹரம்பூரில் இன்று மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது. பைக்கில் வந்த ஒரு மர்ம கும்பல் ஸ்டேயன் சவுத்ரியை மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டது. ஸ்டேயன் சவுத்ரி முன்பு, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியுடன் நெருக்கமான நண்பராக இருந்தார் என்று ஆதரங்கள் கூறுகின்றன. அதன் பிறகு, அவர் காங்கிரஸை விடுத்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

ஸ்டேயன் சவுத்ரி சுட்டுக் கொலை