NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது 
    திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது

    திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது 

    எழுதியவர் Nivetha P
    May 04, 2023
    01:36 pm

    செய்தி முன்னோட்டம்

    திருச்சி மாவட்டம் உப்பிலியப்புரத்தினை அடுத்த வலையப்பட்டி கிராமத்தினை சேர்ந்தவர் தேவி(43).

    இவர் துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணக்கு ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார்.

    அதனை தொடர்ந்து இவர் சித்திரப்பட்டி என்னும் பகுதியில் தங்கியிருந்து பள்ளி மாணவர்கள் சிலருக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    தேவி பணிபுரியும் அதே பள்ளியில் பயிலும் துறையூரினை சேர்ந்த 16 வயதுடைய 10ம் வகுப்பு மாணவர் ஒருவன் அவரிடம் டியூஷன் படித்து வந்ததாக தெரிகிறது.

    அந்த மாணவனிடம் தேவி நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் மாணவனின் நடத்தையில் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

    தங்கள் மகனின் நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்கள்.

    போக்ஸோ

    திருச்சி சிறையில் ஆசிரியை அடைப்பு 

    அதன்படி அந்த மாணவன் அந்த ஆசிரியையான தேவியிடம் படிப்பில் கவனம் செலுத்தாமல் இரவு நேரங்களில் அதிக நேரம் பேசி வருவதை பெற்றோர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

    மேலும் கடந்த 27ம் தேதி தனக்கு அந்த ஆசிரியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து அவர்கள் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியை தேவி மீது புகார் அளித்துள்ளார்கள்.

    அந்த புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் ஆசிரியை தேவியின் மீது போக்ஸோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் தமிழ்நாடு
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் தமிழ்நாடு
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் தமிழ்நாடு

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025