NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இனி திருச்சி டு யாழ்ப்பாணம் ஒரு மணி நேரம்தான்; 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமான சேவைகள் தொடங்கியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இனி திருச்சி டு யாழ்ப்பாணம் ஒரு மணி நேரம்தான்; 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமான சேவைகள் தொடங்கியது
    திருச்சி-யாழ்ப்பாணம் விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்

    இனி திருச்சி டு யாழ்ப்பாணம் ஒரு மணி நேரம்தான்; 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமான சேவைகள் தொடங்கியது

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 31, 2025
    12:00 pm

    செய்தி முன்னோட்டம்

    47 ஆண்டுகளுக்குப் பிறகு, திருச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அன்று மீண்டும் தொடங்கப்பட்டன.

    இலங்கையின் யாழ்ப்பாணத்தின் உள்ள பலாலி சர்வதேச விமான நிலையம் ஈழப்போர் காரணமாக நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 2019ஆம் ஆண்டில் குறுகியகாலம் மட்டும் இயக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமானங்கள் இயக்கப்பட ஆரம்பித்தன.

    இந்நிலையில், தற்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் திருச்சி-யாழ்ப்பாண பாதையில் விமானங்களை முழுநேரமாக மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது.

    இதற்கான பயண அட்டவணையின்படி, விமானங்கள் திருச்சியில் இருந்து பிற்பகல் 1.25 மணிக்குப் புறப்பட்டு 2.25 மணிக்கு ஒருமணி நேரத்தில் யாழ்ப்பாணத்தை அடையும்.

    யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பும் விமானம் பிற்பகல் 3.05 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.05 மணிக்கு திருச்சியை வந்தடையும்.

    டிக்கெட் விலை

    திருச்சி-யாழ்ப்பாண டிக்கெட் விலை

    திருச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான ஒருவழிப் பயணத்திற்கான டிக்கெட் விலை ₹5,900 முதல் ₹6,400 வரை இருக்கும்.

    இந்த பயண சேவையின் தொடக்க விமானம் 27 பயணிகளுடன் பிற்பகல் 2.02 மணிக்கு பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    திரும்பும் விமானம் பிற்பகல் 3.00 மணிக்கு 36 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், துணைத் தூதர் ஜெனரல் சாய் முரளி தலைமையில், வரலாற்றுச் சிறப்புமிக்க சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதை கேக் வெட்டி கொண்டாடினர்.

    மேலும், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்திற்கு நீர் பாய்ச்சி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்தப் பாதையின் மறுதொடக்கம், இணைப்பை அதிகரிப்பதோடு, இந்தியா-இலங்கை இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    வாட்டர் சல்யூட் உடன் உற்சாக வரவேற்பு

    #WATCH | திருச்சி - யாழ்ப்பாணம் இடையே தினசரி விமான சேவையை தொடங்கியது இண்டிகோ நிறுவனம்..!

    யாழ்ப்பாணம் சென்றடைந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் உடன் உற்சாக வரவேற்பு#SunNews | #Trichy | #Jaffna | #Indigo pic.twitter.com/XaIjq0BkY9

    — Sun News (@sunnewstamil) March 31, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமான சேவைகள்
    விமானம்
    திருச்சி
    யாழ்ப்பாணம்

    சமீபத்திய

    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா

    விமான சேவைகள்

    குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து லெபனான் விமானங்களில் வாக்கி-டாக்கிகளை தடை செய்த கத்தார் ஏர்வேஸ் லெபனான்
    சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்; திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம் திருச்சி
    2027-க்குள் டெல்லி விமான நிலைத்தில் இந்தியாவின் முதல் விமான ரயில் அறிமுகம் டெல்லி
    சென்னை விமான நிலையத்தில் விமான அட்டவணையில் திடீர் மாற்றம்; என்ன காரணம்? சென்னை

    விமானம்

    சபரிமலை பக்தர்கள் கேபின் பேக்கேஜில் இருமுடிக்கட்டு எடுத்து செல்ல அனுமதி சபரிமலை
    இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தொழிற்சாலை; ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து கூட்டாக தொடங்கி வைத்தார் மோடி இந்தியா
    கடும் விமர்சனங்களை சந்திக்கும் ஏர் இந்தியாவின் கேபின் க்ரூ ரூம் ஷேரிங் திட்டம் ஏர் இந்தியா
    ஜெட் ஏர்வேஸின் உரிமையை ஜேகேசிக்கு மாற்றியது ரத்து; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு  ஜெட் ஏர்வேஸ்

    திருச்சி

    ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம் ஆந்திரா
    புதிய விமான நிலைய டெர்மினலை திறந்து வைக்க திருச்சி வருகிறார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
     ஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
    திருச்சியில் பிரதமர் மோடி: ரூ.20,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்கள் தொடக்கம்  பிரதமர் மோடி

    யாழ்ப்பாணம்

    கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025