NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குழந்தை தத்தெடுப்பு குறித்து திருநங்கை தொடர்ந்த வழக்கு - 2 வார கால அவகாசம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    குழந்தை தத்தெடுப்பு குறித்து திருநங்கை தொடர்ந்த வழக்கு - 2 வார கால அவகாசம் 
    குழந்தை தத்தெடுப்பு குறித்து திருநங்கை தொடர்ந்த வழக்கு - மத்திய அரசுக்கு 2வார கால அவகாசம்

    குழந்தை தத்தெடுப்பு குறித்து திருநங்கை தொடர்ந்த வழக்கு - 2 வார கால அவகாசம் 

    எழுதியவர் Nivetha P
    Jun 30, 2023
    06:18 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் திருநங்கை பிரித்திகா யாஷினி.

    இவர் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில் அவர்,"நான் எனது பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். எனது தனிமையினைப்போக்க ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவுச்செய்து டெல்லி மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன்மூலம் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் நான் ஒரு திருநங்கை என்னும் காரணத்தினால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது"என்று தெரிவித்திருந்தார்.

    மேலும் தனது விண்ணப்பத்தினை ஏற்று, தத்தெடுப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.

    அதேபோல் சிறார் தத்தெடுப்பு விதிகளில் பாலின வேறுபாடு ஏதும் குறிப்பிடப்படவில்லை.

    குழந்தையினை நல்ல விதத்தில் வளர்க்கக்கூடியவராக இருக்கவேண்டும் என்பதே விதிமுறைகளில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    நீதிமன்றம் 

    சென்னை நீதிமன்ற நீதிபதி மீண்டும் இன்று விசாரணை மேற்கொண்டார் 

    தொடர்ந்து அந்த மனுவில், அப்படி பார்த்தால் தான் ஒரு அரசாங்கப்பணியில் உள்ளதால் தன்னால் குழந்தையினை நல்லமுறையில் வளர்க்கமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், இம்மனு கடந்த ஜூன் 23ம்தேதி விசாரணைக்கு வந்தது.

    இந்த மனுவினை நீதிபதி தண்டபாணி விசாரித்தார்.

    அப்போது அவர், இது குறித்து பதிலளிக்க மத்திய அரசு மற்றும் மத்திய குழந்தை தத்தெடுப்பு வள ஆணையத்திற்கு ஒரு வார கால அவகாசத்தினை அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இதனையடுத்து இந்த வழக்கானது இன்று(ஜூன்.,30) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஏற்கனவே ஒரு வார கால அவகாசம் அளித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மத்திய அரசுக்கும், மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்துக்கும் மேலும் 2 வார கால அவகாசத்தினை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    காவல்துறை
    காவல்துறை
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெல்லி

    உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.வி.விஸ்வநாதன் உயர்ந்த கதை  உச்ச நீதிமன்றம்
    'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு  தமிழ்நாடு
    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு இந்தியா
    மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்  இந்தியா

    காவல்துறை

    கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை  மு.க ஸ்டாலின்
    கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்! காவல்துறை
    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி  காவல்துறை
    சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்  தமிழ்நாடு

    காவல்துறை

    கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம்  சென்னை
    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு  விருதுநகர்
    தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!  தமிழ்நாடு
    பிரபலமான அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி  திருப்பூர்

    மத்திய அரசு

    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை! மல்யுத்தம்
    எலெக்ட்ரிக் பைக்குகளின் விலையை ரூ.30,000 வரை உயர்த்திய மேட்டர் எனர்ஜி.. ஏன்? எலக்ட்ரிக் பைக்
    தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து - மா.சுப்ரமணியம் டெல்லி செல்ல முடிவு  தமிழக அரசு
    பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025