NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு

    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு

    எழுதியவர் Nivetha P
    Mar 29, 2023
    08:29 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி-கற்பகம் தம்பதியினர்.

    இவர்களது மகளான பிரதீஷா 9வயது சிறுமி.

    நான்காம் வகுப்பு படித்துவரும் இவர், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்கள் செய்து வெளியிட்டு பிரபலமானவர்.

    குழந்தை பருவத்திலேயே இவர் துருதுருவென்று இருப்பார், அப்போதே அவருக்கு தனித்திறமை இருந்த காரணத்தினால் தான் படத்தில் வரும் காமெடி காட்சிகளுக்கு டயலாக் பேசுவது,

    முக பாவனைகளை அதற்கேற்றாற்போல் செய்துக்காட்டுவது போன்றவைகளை அவரால் செய்யமுடிந்தது என்றே கூறலாம்.

    இவரை அப்பகுதியில் 'இன்ஸ்ட்டா குயின்' என்று அழைத்தனர்.

    இதற்கிடையே நேற்றுமுன்தினம் இரவு 8மணியளவில் சிறுமி பிரதீஷா அருகிலுள்ள தனது பாட்டி வீட்டில் பக்கத்துவீட்டு தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது அவரது தாய்-தந்தை அங்குவந்து விளையாடியதுபோதும், வீட்டிற்குசென்று படி என்று கூறிவிட்டு மோட்டார்சைக்கிளில் வெளியில் சென்றதாக கூறப்படுகிறது.

    தூக்கிட்டு தற்கொலை

    படிக்க சொல்லி கண்டித்ததால் விபரீதம்

    ஒரு மணிநேரம் கழித்து கிருஷ்ணமூர்த்தியும், கற்பகமும் வீட்டிற்கு வந்துள்ளார்கள்.

    அப்போது வீட்டின் உள்புறம் பூட்டப்பட்டுள்ளது, வெகு நேரம் கதவை தட்டி பார்த்தும் அவர் வீட்டின் கதவை திறக்கவில்லை.

    இதில் பயந்துபோன கிருஷ்ணமூர்த்தி வெளிப்புறத்தில் இருந்து படுக்கையறை ஜன்னலை உடைத்துள்ளார்.

    அப்போது பிரதீஷா வெள்ளை நிற சிறிய துண்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளார்.

    பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தோழிகள் முன்பு படிக்கச்சொல்லி கண்டித்ததால் தான் சிறுமி இவ்வாறு செய்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இன்ஸ்டாகிராம்
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    இன்ஸ்டாகிராம்

    மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு டிரெண்டிங்
    2022: மக்களால் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியல் ஆண்ட்ராய்டு
    இளைஞர்களின் நலனுக்காக Quiet Mode என்ற அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்; ஆண்ட்ராய்டு
    ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் Artifact - இன்ஸ்டாகிராம் நிறுவனர்களின் அடுத்த ப்ளான்! தொழில்நுட்பம்

    மாவட்ட செய்திகள்

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல் திருவண்ணாமலை
    கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள் கன்னியாகுமரி
    சென்னையில் 1,470 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை சென்னை
    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025