NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல்
    தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல்

    தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல்

    எழுதியவர் Nivetha P
    Feb 07, 2023
    05:21 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு, நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.

    இதனால் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்துசென்றனர்.

    இந்நிலையில் தைப்பூசதிருவிழா நாளன்று காலை கல்லூரி பெண்கள் சிலர் கோயிலுக்கு வந்துள்ளார்கள்.

    அவர்களோடு பர்தா அணிந்த பெண் ஒருவரும் வந்துள்ளார்.

    உள்ளே நுழைந்த அவர் சாமிதரிசனம் செய்ததோடு, கோயில் வளாகத்தில் பல இடங்களில் புகைப்படமும் எடுத்துள்ளார்.

    கோயில் பணியாளர்களும் அவரை எந்த கேள்வியும் கேட்காமல் இருந்துள்ளார்கள்.

    இதனைதொடர்ந்து தகவலறிந்து இந்து முன்னணி நிர்வாகிகள் கோயிலுக்குள் வந்ததும் அந்த பெண் அங்கிருந்து உடனே கிளம்பியதாக கூறப்படுகிறது.

    நெல்லையப்பர் கோயிலில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பக்தர்கள் புகாரளித்துள்ள நிலையில், இதற்கு நெல்லை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

    அறநிலையத்துறை

    ஆகமவிதிகள் குறித்த அறிவிப்பினை கோயில்களில் மீண்டும் வைக்க மாநில இந்து முன்னணி தலைவர் கோரிக்கை

    மேலும் இந்த சர்ச்சை குறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்ட பொழுது, விடுமுறை தினம் என்பதால் கல்லூரி மாணவிகளோடு அப்பெண் வந்திருக்கலாம், ஆனால் அவர் மண்டபம் தாண்டி உள்ளே செல்லவில்லை என்று கூறுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து இதுகுறித்து மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கையில், இந்து கோயில்களில் ஆகமவிதிகள் படி கொடிமரம் முன்பு இந்துக்கள் அல்லாதோர் உள்ளே செல்லக்கூடாது என்ற அறிவிப்பு இருக்கும்.

    தற்போது அது பல கோயில்களில் அகற்றப்பட்டுள்ளதால் தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது.

    எனவே மீண்டும் இது போன்ற அறிவிப்புகளை கோயிலில் வைக்க வேண்டும் என்று அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த சம்பவத்தினை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள கோயில்களில் பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    தமிழ்நாடு

    மனித கழிவுகள் கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க கோரிய DYFI சங்கத்தினர் கைது இந்தியா
    தை அமாவாசை - சதுரகிரியில் மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு இந்தியா
    மாணவியின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாரஸ்ய பதில் இந்தியா
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி தேர்தல்

    இந்தியா

    கேரளாவில் ஏர்டெல் 5ஜி சேவை தொடக்கம்! அறிமுக சலுகை என்ன? 5ஜி தொழில்நுட்பம்
    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI ரிசர்வ் வங்கி
    ஊக்கமருந்து சோதனையில் தோல்வி! இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாத தடை! விளையாட்டு
    'Go Live Together': யூடியூப் அறிமுகப்படுத்திய ஸ்ட்ரீமிங் அப்டேட் - என்ன பலன்? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025