NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல்
    இந்தியா

    தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல்

    தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல்
    எழுதியவர் Nivetha P
    Feb 07, 2023, 05:21 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல்
    தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல்

    தமிழ்நாடு, நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. இதனால் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்துசென்றனர். இந்நிலையில் தைப்பூசதிருவிழா நாளன்று காலை கல்லூரி பெண்கள் சிலர் கோயிலுக்கு வந்துள்ளார்கள். அவர்களோடு பர்தா அணிந்த பெண் ஒருவரும் வந்துள்ளார். உள்ளே நுழைந்த அவர் சாமிதரிசனம் செய்ததோடு, கோயில் வளாகத்தில் பல இடங்களில் புகைப்படமும் எடுத்துள்ளார். கோயில் பணியாளர்களும் அவரை எந்த கேள்வியும் கேட்காமல் இருந்துள்ளார்கள். இதனைதொடர்ந்து தகவலறிந்து இந்து முன்னணி நிர்வாகிகள் கோயிலுக்குள் வந்ததும் அந்த பெண் அங்கிருந்து உடனே கிளம்பியதாக கூறப்படுகிறது. நெல்லையப்பர் கோயிலில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பக்தர்கள் புகாரளித்துள்ள நிலையில், இதற்கு நெல்லை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

    ஆகமவிதிகள் குறித்த அறிவிப்பினை கோயில்களில் மீண்டும் வைக்க மாநில இந்து முன்னணி தலைவர் கோரிக்கை

    மேலும் இந்த சர்ச்சை குறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்ட பொழுது, விடுமுறை தினம் என்பதால் கல்லூரி மாணவிகளோடு அப்பெண் வந்திருக்கலாம், ஆனால் அவர் மண்டபம் தாண்டி உள்ளே செல்லவில்லை என்று கூறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்து மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கையில், இந்து கோயில்களில் ஆகமவிதிகள் படி கொடிமரம் முன்பு இந்துக்கள் அல்லாதோர் உள்ளே செல்லக்கூடாது என்ற அறிவிப்பு இருக்கும். தற்போது அது பல கோயில்களில் அகற்றப்பட்டுள்ளதால் தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது. எனவே மீண்டும் இது போன்ற அறிவிப்புகளை கோயிலில் வைக்க வேண்டும் என்று அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தினை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள கோயில்களில் பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்

    தமிழ்நாடு

    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் கர்நாடகா
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    இந்தியா

    UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம் தொழில்நுட்பம்
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் மத்திய பிரதேசம்
    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு நாடாளுமன்றம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023