NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு
    தமிழகத்தில் தொடரும் சாதி வன்முறை - ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு

    எழுதியவர் Nivetha P
    Feb 25, 2023
    11:19 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் நெய்வயல் என்னும் கிராமத்தில் உள்ள ஜீவா(33) என்பவர் மீது உயர்சாதியை சேர்ந்த இளைஞர்கள் சிறுநீர் கழித்துள்ளார்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது.

    தலித் நபர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்து 5 நாட்களுக்கு பின்னரே இதுதொடர்பாக துவாடனை போலீசார் நேற்று(பிப்.,24) அந்த கும்பல் மீது வழக்குபதிவு செய்துள்ளது.

    அப்பகுதியில் உள்ள உயர்சாதியை சேர்ந்த 17வயது இளைஞர் ஒருவன் குடிபோதையில் ஜீவாவின் உறவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து ஜீவா அந்த இளைஞரின் குடும்பத்தை அணுகி பிரச்சனையை சமாதானமாக பேசி தீர்த்துள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த இந்த இளைஞர் தனது கூட்டாளிகளோடு சென்று ஜீவாவையும் அவரது நண்பர் சுரேஷ் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

    வழக்கு பதிவு

    ஜீவாவை கொடூரமாக தாக்கிய சாதிவெறி கொண்ட 11 பேர்

    இந்த தாக்குதலில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பலில் 3 சிறார்களும் இடம்பெற்றுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜீவாவை தேடி பிடித்த அந்த கும்பல் கடந்த 19ம் தேதி மாலை அவரை கண்டறிந்து, யாருமில்லா பகுதிக்கு கொண்டு சென்று கொடூரமாக தாக்கியுள்ளார்கள்.

    அவரது சாதியை சுட்டிக்காட்டி அவதூறாக பேசியதோடு, அவர் மேல் சிறுநீறும் கழித்துள்ளார்கள்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ஜீவாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள்.

    இதனையடுத்து ஜீவா அளித்த புகாரின் பேரில் எட்டு இளைஞர்கள் மற்றும் 3 சிறார்கள் கொண்ட அந்த கும்பல் மீது ஐபிசி மற்றும் எஸ்சி/எஸ்டி சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு செய்தி
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை
    கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று  கோவிட் 19
    அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD காற்றழுத்த தாழ்வு நிலை

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு

    மாவட்ட செய்திகள்

    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல் வாகனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025