NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு
    இந்தியா

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு
    எழுதியவர் Nivetha P
    Feb 25, 2023, 11:19 am 0 நிமிட வாசிப்பு
    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு
    தமிழகத்தில் தொடரும் சாதி வன்முறை - ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு

    தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் நெய்வயல் என்னும் கிராமத்தில் உள்ள ஜீவா(33) என்பவர் மீது உயர்சாதியை சேர்ந்த இளைஞர்கள் சிறுநீர் கழித்துள்ளார்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது. தலித் நபர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்து 5 நாட்களுக்கு பின்னரே இதுதொடர்பாக துவாடனை போலீசார் நேற்று(பிப்.,24) அந்த கும்பல் மீது வழக்குபதிவு செய்துள்ளது. அப்பகுதியில் உள்ள உயர்சாதியை சேர்ந்த 17வயது இளைஞர் ஒருவன் குடிபோதையில் ஜீவாவின் உறவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜீவா அந்த இளைஞரின் குடும்பத்தை அணுகி பிரச்சனையை சமாதானமாக பேசி தீர்த்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த இந்த இளைஞர் தனது கூட்டாளிகளோடு சென்று ஜீவாவையும் அவரது நண்பர் சுரேஷ் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

    ஜீவாவை கொடூரமாக தாக்கிய சாதிவெறி கொண்ட 11 பேர்

    இந்த தாக்குதலில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பலில் 3 சிறார்களும் இடம்பெற்றுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜீவாவை தேடி பிடித்த அந்த கும்பல் கடந்த 19ம் தேதி மாலை அவரை கண்டறிந்து, யாருமில்லா பகுதிக்கு கொண்டு சென்று கொடூரமாக தாக்கியுள்ளார்கள். அவரது சாதியை சுட்டிக்காட்டி அவதூறாக பேசியதோடு, அவர் மேல் சிறுநீறும் கழித்துள்ளார்கள். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ஜீவாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள். இதனையடுத்து ஜீவா அளித்த புகாரின் பேரில் எட்டு இளைஞர்கள் மற்றும் 3 சிறார்கள் கொண்ட அந்த கும்பல் மீது ஐபிசி மற்றும் எஸ்சி/எஸ்டி சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு செய்தி
    மாவட்ட செய்திகள்
    ராமநாதபுரம்

    தமிழ்நாடு செய்தி

    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு சென்னை
    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் கோவை
    வரலாற்று பதிவு: மு.கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நாள் இன்று! வைரல் செய்தி
    ட்ரோன் கேமராவை கோவை வனப்பகுதியில் பறக்கவிட்ட சுற்றுலாப்பயணிக்கு ரூ. 25000 அபராதம் கோவை

    மாவட்ட செய்திகள்

    தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு இந்தியா
    கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள் தமிழ்நாடு
    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    சென்னையில் 1,470 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை சென்னை

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது மாவட்ட செய்திகள்
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் மாவட்ட செய்திகள்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் கடற்கரை
    தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023