NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி போராட்டம் - அமைச்சர் நாசரோடு பேச்சுவார்த்தை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி போராட்டம் - அமைச்சர் நாசரோடு பேச்சுவார்த்தை
    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி போராட்டம் - அமைச்சர் நாசரோடு பேச்சுவார்த்தை

    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி போராட்டம் - அமைச்சர் நாசரோடு பேச்சுவார்த்தை

    எழுதியவர் Nivetha P
    Mar 17, 2023
    11:40 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று(மார்ச்.,16) சென்னை தலைமை செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சரை சந்தித்து பால் உற்பத்தியாளர் நல சங்கம் கொள்முதல் விலையினை உயர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொது செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன் பேசியுள்ளார்.

    அவர் கூறுகையில், ஆவின் பால் கொள்முதல் 36 லட்சம் லிட்டரில் இருந்து தற்போது 27 லட்ச லிட்டராக குறைந்துள்ளது.

    அதே போல் நுகர்வோருக்கு தரமான பால் கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    உடன்பாடு ஏற்படவில்லை

    அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை

    இதற்கு தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் ஆவின் நிறுவனத்தை விட பால் ஒரு லிட்டருக்கு ரூ.6 முதல் 12 வரை கொடுத்ததுத்தான் காரணம் என கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து பேசிய அவர், பசும்பாலுக்கு ரூ.55 ஆகவும், எருமை பாலுக்கு ரூ.68 ஆகவும் கொள்முதல் விலையினை உயர்த்தி கொடுக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

    இதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் ஒரு பிரிவாக செயல்பட்டு வரும் ஆர்.ராஜேந்திரன், 'அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    எனவே, திட்டமிட்ட படி பால் நிறுத்த போராட்டம் தொடங்கும்' என கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை

    சமீபத்திய

    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை
    இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் வங்கிக் கணக்கு
    ஜூன் மாதத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்க விலை; இன்றைய (ஜூன் 2) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை

    தமிழ்நாடு

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேர்ந்த 2 தற்கொலைகள் - சென்னை உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக இருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள் இந்தியா
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் - 8.75 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் புதுச்சேரி
    வானிலை அறிக்கை: மார்ச் 13- மார்ச் 17 புதுச்சேரி

    சென்னை

    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா தமிழ்நாடு
    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் தமிழ்நாடு
    அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது அமெரிக்கா
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் நீட் தேர்வு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025