NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
    மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்(படம்: இந்து தமிழ்)

    தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 21, 2022
    03:34 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

    மதுரை உலக தமிழ்ச் சங்க நூலகத்தில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து புத்தங்கங்களையும் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மேலும், அந்த நூலகத்திற்கு அடிப்படை வசதியும் செய்துதர வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது.

    இதற்கு முன்பு நடைபெற்ற இதன் விசாரணையின் போது மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    தமிழ் மொழி

    தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

    மதுரை உலகத் தமிழ்ச் சங்க நூலகத்தில் தற்போது 26,035 புத்தகங்கள் இருப்பதாகவும் அந்த நூலகத்தை அமைக்க இதுவரை ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர், நீதிமன்ற விசாரணையில் கூறினார்.

    இதனால், இந்த மனுவின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று மீண்டும் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ் வளர்ச்சிக்குத் தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவில், "தமிழ் வளர்ச்சிக்கு தேவையான நிதியைத் தமிழக அரசு ஒதுக்க வேண்டும். மேலும், தமிழ் இலக்கியங்களைப் பிரபலப்படுத்துவதற்கு தேவையான நிகழ்ச்சிகளையும் தமிழக அரசு முன்னெடுத்து நடத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா

    இந்தியா

    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி வைரஸ்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? குஜராத்
    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! உலக செய்திகள்
    தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025