NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
    இந்தியா

    தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 21, 2022, 03:34 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
    மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்(படம்: இந்து தமிழ்)

    தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மதுரை உலக தமிழ்ச் சங்க நூலகத்தில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து புத்தங்கங்களையும் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும், அந்த நூலகத்திற்கு அடிப்படை வசதியும் செய்துதர வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு நடைபெற்ற இதன் விசாரணையின் போது மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

    மதுரை உலகத் தமிழ்ச் சங்க நூலகத்தில் தற்போது 26,035 புத்தகங்கள் இருப்பதாகவும் அந்த நூலகத்தை அமைக்க இதுவரை ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர், நீதிமன்ற விசாரணையில் கூறினார். இதனால், இந்த மனுவின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ் வளர்ச்சிக்குத் தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில், "தமிழ் வளர்ச்சிக்கு தேவையான நிதியைத் தமிழக அரசு ஒதுக்க வேண்டும். மேலும், தமிழ் இலக்கியங்களைப் பிரபலப்படுத்துவதற்கு தேவையான நிகழ்ச்சிகளையும் தமிழக அரசு முன்னெடுத்து நடத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் கோவை
    தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம் வைரல் செய்தி
    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை

    இந்தியா

    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு கொரோனா
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் நாடாளுமன்றம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023