NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை - தமிழக அரசு உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை - தமிழக அரசு உத்தரவு 
    அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை - தமிழக அரசு உத்தரவு

    அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை - தமிழக அரசு உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Apr 26, 2023
    01:33 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது சாலை விபத்துக்கள் அதிகமாகி வருகிறது. இது குறித்து தமிழக அரசு தொடர்ந்து பலதரப்பட்ட கட்டுப்பாடுகளையும், விழிப்புணர்வுகளையும் செய்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாகவே தற்போது தமிழக அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை, காது பரிசோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகள் கட்டாயம் செய்ய வேண்டும் என்னும் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 50 வயதுக்கு குறைந்த ஓட்டுநர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கண், காது பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    கண்

    உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிப்பு 

    அதே போல், 50 வயதுக்கு அதிகமான ஓட்டுநர்கள் 1 ஆண்டுக்கு ஒரு முறை கண், காது போன்ற மருத்துவ பரிசோதனைகளை செய்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த குறிப்பில், சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் இலவசமாக மருத்துவ பரிசோதனை முகாம்நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

    அவ்வாறு எடுக்கப்படும் மருத்துவப்பரிசோதனைகளில் வரும் அறிக்கையில் ஓட்டுநர்கள் உடல் நலம் தகுதியற்றதாக தெரிவிக்கப்பட்டால் அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கண், காது மருத்துவ பரிசோதனைகளில் தகுதியற்றவர்களாக கண்டறியப்படுபவர்கள் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளில் அதே சம்பளத்தில் நியமிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 சிறார்களுக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு  மு.க ஸ்டாலின்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    தமிழகத்தில் குறைந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை! காரணம் என்ன? சுற்றுலாத்துறை
    பட்டு வேட்டி, சட்டை அணிந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ஆர்.என்.ரவி

    தமிழக அரசு

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு இந்தியா
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவு தமிழ்நாடு
    கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு கருணாநிதி
    நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசல் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ் சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025