NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு
    புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு
    இந்தியா

    புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    February 28, 2023 | 07:21 pm 1 நிமிட வாசிப்பு
    புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு
    புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு

    கடந்த 2004ம் ஆண்டு தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டமான 'தேசிய பென்ஷன் திட்டம்' அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு பென்சன் வராது. இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பழைய அரசு ஊதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அளிக்கக்கோரி அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த சுற்றறிக்கையில் 2003ம் ஆண்டில் இருந்து இப்பொதுவரை தமிழக அரசின் அனைத்து துறைகளின் கீழும் புதிய ஓய்வூதியத்திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற உத்தரவு அளிக்கப்பட்ட பணியாளர்களின் விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    பழைய திட்டத்திற்கு மாற விரும்பும் விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல்

    இதனை தொடர்ந்து அந்த அறிக்கையில், அரசாணைகள் வாயிலாகவோ, அரசு விளக்கங்கள் மூலமோ, நீதிமன்ற உத்தரவு மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் மூலமோ புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து மாற விரும்பும் விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தின் படி, குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு அவர்களது ஊதியத்தில் பாதி அதாவது 50 சதவீதம் பென்ஷனாக அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய நடைமுறையின் கீழ், மத்திய அரசில் ஏப்ரல் 1ம் தேதி அன்றோ அதற்கு பின்னரோ பணியில் சேர்ந்தவர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடவேண்டியவை.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    ஓய்வூதியம்
    தமிழக அரசு

    தமிழ்நாடு

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த வாழ்க்கை பற்றி தெரியாத தகவல்கள் மு.க ஸ்டாலின்
    'ஏற்றமிகு 7 திட்டங்கள்' குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு சென்னை
    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி நாள் ஆதார் புதுப்பிப்பு
    மதுரையில் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ் மதுரை

    ஓய்வூதியம்

    ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    ஏப்ரல் 1 முதல் புதிய NPS விதி: ஓய்வூதியம் மொத்த தொகையை பெற இதை செய்திடுங்கள் தொழில்நுட்பம்
    2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா? தொழில்நுட்பம்
    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு திட்டங்கள்

    தமிழக அரசு

    3 வகையான சத்துமாவு திட்டம்: மார்ச் 1ஆம் தேதி ஆரம்பம் தமிழ்நாடு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு அறநிலையத்துறை
    தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ திண்டுக்கல்
    அம்பாசமுத்திரம் பகுதியில் உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் - தமிழக அரசு தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023