NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும்
    இந்தியா

    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும்

    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும்
    எழுதியவர் Nivetha P
    Feb 18, 2023, 08:36 pm 1 நிமிட வாசிப்பு
    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும்
    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும்

    கடந்த 2019ம்ஆண்டு சீனாவில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி, பேரிழப்புகளை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் இந்த நோயால் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் மக்களால் வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. அதன்பின்னர் தடுப்பூசி கண்டறியப்பட்டு அதன் மூலம் தீவிர தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஓரளவுக்கு இந்த நோயானது கட்டுக்குள் வந்தது. தடுப்பூசி வந்த பின்னரே ஊரடங்கு தளர்வுகளும் படிப்படியாக வந்தது. 2020ம்ஆண்டு மார்ச் 25 முதல் ஜூன் 30வரை இந்தியாவில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அரசு தரப்பினர் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேலாகவே அரசு பணியாளர்கள் பணிக்கு வராமல் இருந்தனர்.

    அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை

    இதனையடுத்து கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினரும் இதுகுறித்து பல்வேறு போராட்டங்களை செய்தது. இந்நிலையில் அவர்களின் கோரிக்கையினை ஏற்று தமிழக அரசு அரசாணை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், 2020ம் ஆண்டு மார்ச் 25 முதல் ஜூன் 30 வரை அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தினை சிறப்பு விடுப்பாக அறிவிப்பதாகவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    கோவிட்
    தமிழ்நாடு
    இந்தியா
    கொரோனா

    கோவிட்

    மருத்துவம்: கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம் கோவிட் 19
    கோவிட் இருமலை கண்டறிவதில் AI மோசமாக செயல்படுகிறது! ஆய்வு கோவிட் 19
    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    உண்மை தகவல் சரிபார்ப்பு: கோவிட் தடுப்பூசியும், அதை சுற்றியுள்ள பக்க விளைவுகள் பற்றிய வதந்தியும் கோவிட் தடுப்பூசி

    தமிழ்நாடு

    ஈரோடு இடைத்தேர்தல் - வெறும் 315 ருபாய் செலவாகியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அறிக்கை ஈரோடு
    'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி நிதியமைச்சர்
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் விழுப்புரம்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு திருநெல்வேலி

    இந்தியா

    Bing சாட்போட்டை இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பயன்படுத்த முடியும்! தொழில்நுட்பம்
    இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு: இதனால் என்ன பலன் கிடைக்கும் இந்தியா
    AI-யை குறித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பில் கேட்ஸ்! செயற்கை நுண்ணறிவு
    11 ஆயிரம் ஃபாலோவர்ஸ்-களை கொண்ட ஆதித்யா ஐயர்! யார் இவர்? செயற்கை நுண்ணறிவு

    கொரோனா

    உலகின் முதல் நாசல் கொரோனா தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கோவிட் தடுப்பூசி
    இந்தியாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இந்தியா
    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி இந்தியா
    ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5 பற்றி அதிகம் அறிந்திராத சில தகவல்கள் வைரஸ்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023