NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீட்டித்து உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீட்டித்து உத்தரவு
    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீட்டித்து உத்தரவு

    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீட்டித்து உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    Feb 15, 2023
    08:01 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி, நவம்பர் 15ம் தேதி முதல் 2,811 மின் பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இதற்கான பணியை மின் வாரியம் துவங்கியது.

    இந்த இணைப்பிற்கான கடைசி நாள் டிசம்பர் 31ம் தேதி என்று கூறப்பட்டு, பின்னர் ஜனவரி 31ம் தேதி என்று மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

    அதன் படி, ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் இறுதி வாய்ப்பாக ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு தமிழக அரசு அறிவித்திருந்தது.

    அமைச்சர் பேட்டி

    7 லட்சம் பேர் இணைக்கவேண்டியுள்ளதால் கால அவகாசம் நீட்டிப்பு

    அதன்படி தமிழக அரசு கொடுத்த கால அவகாசம் இன்றோடு முடிவடையும் நிலையில், மீண்டும் இதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

    இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், இதுவரை 2 கோடியே 60 லட்சம் பேர் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளார்கள்.

    மேலும் 7 லட்சம் பேர் இணைக்கவேண்டியுள்ளது. அவர்களுக்காக பிப்ரவரி 28ம் தேதி வரை இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, இனியும் நேரம் கொடுக்க முடியாது, இன்னும் 13 நாட்களுக்குள் இணைப்பினை மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆதார் புதுப்பிப்பு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி

    ஆதார் புதுப்பிப்பு

    50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம் - புது வசதி அறிமுகம் இந்தியா
    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம் தமிழக அரசு
    தமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல் தமிழ்நாடு
    ஆதார் அட்டையில் பெயர் முகவரியை திருத்தம் செய்வது எப்படி? இந்தியா

    தமிழ்நாடு

    ஓசூர் அருகே ஏரியில் உற்சாகமாக குளியல் போட்ட 3 யானைகள் மாவட்ட செய்திகள்
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் கன்னியாகுமரி
    காஞ்சியில் 11 கின்னஸ் சாதனைகளை படைத்த இளைஞர் மாவட்ட செய்திகள்
    தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி மாவட்ட செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025