NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல்
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல்

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல்

    எழுதியவர் Nivetha P
    Feb 18, 2023
    06:01 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக காவல்துறையினர் 9 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.

    இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஆரிப்(35) மற்றும் ஆசாத் ஆகியோரை ஹரியானாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

    இதனையடுத்து நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டோரை அழைத்து கொண்டு மதுரை விமான நிலையத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்து அவர்களை சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் சாலை மார்க்கமாக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அதிகாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

    நீதிமன்றம் உத்தரவு

    ஆஜர்படுத்தப்பட்ட 2 கொள்ளையர்களுக்கு 13 நாட்கள் நீதிமன்ற காவல்

    இதனை தொடர்ந்து கைதான இந்த இரு குற்றவாளிகளையும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து, விசாரணைக்காக திருவண்ணாமலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தெய்வீகம் முன்னர் போலீசார் ஆஜர்படுத்தியுள்ளார்கள்.

    அப்போது இந்த வழக்கு குறித்து கேட்டறிந்த நீதிபதி இந்த இரண்டு கொள்ளையர்களையும் 13 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்
    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் ஹரியானா

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025