NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல்
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல்
    இந்தியா

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல்

    எழுதியவர் Nivetha P
    February 18, 2023 | 06:01 pm 1 நிமிட வாசிப்பு
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல்
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல்

    தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் 9 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஆரிப்(35) மற்றும் ஆசாத் ஆகியோரை ஹரியானாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டோரை அழைத்து கொண்டு மதுரை விமான நிலையத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்து அவர்களை சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் சாலை மார்க்கமாக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அதிகாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

    ஆஜர்படுத்தப்பட்ட 2 கொள்ளையர்களுக்கு 13 நாட்கள் நீதிமன்ற காவல்

    இதனை தொடர்ந்து கைதான இந்த இரு குற்றவாளிகளையும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, விசாரணைக்காக திருவண்ணாமலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தெய்வீகம் முன்னர் போலீசார் ஆஜர்படுத்தியுள்ளார்கள். அப்போது இந்த வழக்கு குறித்து கேட்டறிந்த நீதிபதி இந்த இரண்டு கொள்ளையர்களையும் 13 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    திருவண்ணாமலை
    மாவட்ட செய்திகள்

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை பெங்களூர்
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது - மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மறுப்பு காவல்துறை
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் காவல்துறை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு

    மாவட்ட செய்திகள்

    திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள் தமிழ்நாடு
    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா திருச்செந்தூர்
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் கன்னியாகுமாரி
    அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள் தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023