NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம்
    கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம்
    இந்தியா

    கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம்

    எழுதியவர் Nivetha P
    February 13, 2023 | 08:29 am 1 நிமிட வாசிப்பு
    கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம்
    கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம்

    திருவள்ளூர் பகுதியில் உள்ள அதிகத்தூர் என்னும் பகுதியில் ஆரி மற்றும் எம்ப்ராய்டரி போடுவதில் தேர்ந்த கைவினை கலைஞர்களாக உள்ள கொத்தடிமை தொழிலாளர்களுக்காக சுயஉதவி குழுக்கள் அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு காலத்தில் செங்கல் சூளைகளிலும், அரிசி ஆலைகளிலும் கடினமாக உழைத்து முதலாளிகளுக்கு அடிமையாக இருந்து வந்த மக்கள் தற்போது தங்களுக்கு பிடித்த தொழிலினை செய்து தங்களுக்கான வருமானத்தை ஈட்டுகிறார்கள். மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றும் முயற்சியாக 'சிறகுகள்' என்னும் அமைப்பின் மூலம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவங்கப்பட்டுள்ளது. சமூகத்தில் மக்கள் மத்தியில் இவர்களது தயாரிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவும், அந்த பொருட்களுக்கான சிறந்த சந்தை விலையினை பெறவும் இந்த 'ஜாரி' அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இன்ஸ்டாக்ராம் பக்கத்தினை உருவாக்கிய திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்

    இந்த அமைப்பின் மூலம் கொத்தடிமையாக ஒருவருக்கு கீழ் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தற்போது சுயமாக ஓர் தொழிலை செய்து கவுரவமாக வாழ துவங்கியுள்ளார்கள். அல்லிப்பூக்கள் மற்றும் சாமந்தி பூ என்னும் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் 'ஜாரி' திட்டத்திற்காக அடையாளம் கண்டு அவர்கள் மூலம் தொழிலாளர்களின் திறனை வெளிக்கொண்டுவர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை விளம்பரப்படுத்த இதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இன்ஸ்டாக்ராம் பக்கத்தினை உருவாக்கியுள்ளது. மேலும் இதற்கான இணையத்தளத்தை உருவாக்குதல், இ-காமர்ஸ் தளங்களை கையாள சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளித்தல், போன்ற பல திட்டங்களை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    ஈரோடு இடைத்தேர்தல் - 19ம் தேதி முதல் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் ஈரோடு
    ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் நிதின் கட்காரி
    பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இபிஎஸுக்கு எதிராக வழக்கு கோவை
    ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரருக்கு வெள்ளிப்பதக்கம்!! இந்தியா

    மாவட்ட செய்திகள்

    நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர் கோவை
    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் கோவை
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை கன்னியாகுமாரி
    வேலூரில் சிறப்பு தேவை குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச முடித்திருத்தம் தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023