NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம்
    கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம்

    கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம்

    எழுதியவர் Nivetha P
    Feb 13, 2023
    08:29 am

    செய்தி முன்னோட்டம்

    திருவள்ளூர் பகுதியில் உள்ள அதிகத்தூர் என்னும் பகுதியில் ஆரி மற்றும் எம்ப்ராய்டரி போடுவதில் தேர்ந்த கைவினை கலைஞர்களாக உள்ள கொத்தடிமை தொழிலாளர்களுக்காக சுயஉதவி குழுக்கள் அமைக்கப்பட்டது.

    இதன் மூலம் ஒரு காலத்தில் செங்கல் சூளைகளிலும், அரிசி ஆலைகளிலும் கடினமாக உழைத்து முதலாளிகளுக்கு அடிமையாக இருந்து வந்த மக்கள் தற்போது தங்களுக்கு பிடித்த தொழிலினை செய்து தங்களுக்கான வருமானத்தை ஈட்டுகிறார்கள்.

    மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றும் முயற்சியாக 'சிறகுகள்' என்னும் அமைப்பின் மூலம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவங்கப்பட்டுள்ளது.

    சமூகத்தில் மக்கள் மத்தியில் இவர்களது தயாரிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவும், அந்த பொருட்களுக்கான சிறந்த சந்தை விலையினை பெறவும் இந்த 'ஜாரி' அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    சுய உதவி குழுக்கள்

    இன்ஸ்டாக்ராம் பக்கத்தினை உருவாக்கிய திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்

    இந்த அமைப்பின் மூலம் கொத்தடிமையாக ஒருவருக்கு கீழ் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தற்போது சுயமாக ஓர் தொழிலை செய்து கவுரவமாக வாழ துவங்கியுள்ளார்கள்.

    அல்லிப்பூக்கள் மற்றும் சாமந்தி பூ என்னும் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் 'ஜாரி' திட்டத்திற்காக அடையாளம் கண்டு அவர்கள் மூலம் தொழிலாளர்களின் திறனை வெளிக்கொண்டுவர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனை விளம்பரப்படுத்த இதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இன்ஸ்டாக்ராம் பக்கத்தினை உருவாக்கியுள்ளது.

    மேலும் இதற்கான இணையத்தளத்தை உருவாக்குதல், இ-காமர்ஸ் தளங்களை கையாள சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளித்தல், போன்ற பல திட்டங்களை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    தமிழ்நாடு

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு தமிழக அரசு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் மாவட்ட செய்திகள்
    தமிழக டிஜிபி பொதுமக்களுக்கு எச்சரிக்கை-'இரிடியம் முதலீடு' என்னும் பெயரில் மோசடி காவல்துறை
    அமெரிக்கர்களின் பார்வை இழப்புக்கு காரணாமாக இருந்த சென்னை நிறுவனத்தில் இரவோடு இரவாக சோதனை சென்னை

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025