NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை
    தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை
    இந்தியா

    தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை

    எழுதியவர் Nivetha P
    March 14, 2023 | 06:04 pm 1 நிமிட வாசிப்பு
    தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை
    தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை

    தமிழ்நாடு-தஞ்சாவூர் பூக்கார தெருவில் வசித்து வருபவர் காஜா மொய்தீன். 63 வயதாகும் இவர் தனது வீட்டின் முன்பக்கத்தில் பழக்கடை ஒன்றினை பல வருடங்களாக நடத்தி வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் என்பதால் இவரை அப்பகுதியில் பலரும் தோழர் என்றே அழைப்பார்களாம். அதேபோல் அவரது கடையும் தோழர் பழக்கடை என்றே அழைக்கப்படுகிறது. புத்தக வாசிப்பின் மீதுள்ள ஆர்வமும் அவசியத்தையும் புரிந்து கொண்டஇவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தலைவர்களின் வாழ்க்கைவரலாறு, சிறுவர் கதைகள், தமிழ்-ஆங்கில அகராதி போன்ற ஏதேனும் ஓர் சிறு புத்தகத்தினை இலவசமாக வழங்கி வருகிறார். இதுகுறித்து காஜா மொய்தீன் கூறுகையில், நான் 9ம்வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். என் குடும்ப சூழ்நிலையால் மேற்கொண்டு என்னால் படிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

    அன்பின் அடிப்படையில் புத்தகங்களை பரிசாக அளிக்கும் காஜா மொய்தீன்

    தொடர்ந்து அவர் பேசுகையில், படிப்பினை நிறுத்தினாலும் புத்தகங்களை அதிகம் படிப்பேன். சிறுவயதில் இருந்தே இந்த தெருவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு புத்தகங்களை பரிசாக அளித்து வருகிறேன் என்று கூறினார். காதல் திருமணம் செய்துகொண்ட காஜா மொய்தீன் தன்னால் படிக்கமுடியவில்லை என்பதால் தனது மனைவியை படிக்க வைத்துள்ளார். பல இன்னல்களுக்கு பிறகு அவரது மனைவி அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றிவருகிறாராம். அவரது மகனும் வக்கீலாக உள்ளார், தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை தனது குடும்பத்தில் ஒருவராக கருதியே புத்தகங்களை வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார். புத்தகம் மட்டுமின்றி தனது கடைக்கு வருவோருக்கு குங்கும சிமில், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றையும் அன்பின் அடிப்படையாக கொண்டு கடந்த 11 ஆண்டுகளாக வழங்கி வருவதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு நீட் தேர்வு
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு மாவட்ட செய்திகள்
    வானிலை அறிக்கை: மார்ச் 14- மார்ச் 18 வானிலை அறிக்கை
    சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம் சென்னை

    மாவட்ட செய்திகள்

    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை மதுரை
    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி கோவை
    தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை தேனி
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் ராமநாதபுரம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023