NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை
    தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை

    தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை

    எழுதியவர் Nivetha P
    Mar 14, 2023
    06:04 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு-தஞ்சாவூர் பூக்கார தெருவில் வசித்து வருபவர் காஜா மொய்தீன். 63 வயதாகும் இவர் தனது வீட்டின் முன்பக்கத்தில் பழக்கடை ஒன்றினை பல வருடங்களாக நடத்தி வருகிறார்.

    கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் என்பதால் இவரை அப்பகுதியில் பலரும் தோழர் என்றே அழைப்பார்களாம்.

    அதேபோல் அவரது கடையும் தோழர் பழக்கடை என்றே அழைக்கப்படுகிறது.

    புத்தக வாசிப்பின் மீதுள்ள ஆர்வமும் அவசியத்தையும் புரிந்து கொண்டஇவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தலைவர்களின் வாழ்க்கைவரலாறு, சிறுவர் கதைகள், தமிழ்-ஆங்கில அகராதி போன்ற ஏதேனும் ஓர் சிறு புத்தகத்தினை இலவசமாக வழங்கி வருகிறார்.

    இதுகுறித்து காஜா மொய்தீன் கூறுகையில், நான் 9ம்வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். என் குடும்ப சூழ்நிலையால் மேற்கொண்டு என்னால் படிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

    தோழர் பழக்கடை

    அன்பின் அடிப்படையில் புத்தகங்களை பரிசாக அளிக்கும் காஜா மொய்தீன்

    தொடர்ந்து அவர் பேசுகையில், படிப்பினை நிறுத்தினாலும் புத்தகங்களை அதிகம் படிப்பேன்.

    சிறுவயதில் இருந்தே இந்த தெருவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு புத்தகங்களை பரிசாக அளித்து வருகிறேன் என்று கூறினார்.

    காதல் திருமணம் செய்துகொண்ட காஜா மொய்தீன் தன்னால் படிக்கமுடியவில்லை என்பதால் தனது மனைவியை படிக்க வைத்துள்ளார்.

    பல இன்னல்களுக்கு பிறகு அவரது மனைவி அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றிவருகிறாராம்.

    அவரது மகனும் வக்கீலாக உள்ளார், தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை தனது குடும்பத்தில் ஒருவராக கருதியே புத்தகங்களை வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    புத்தகம் மட்டுமின்றி தனது கடைக்கு வருவோருக்கு குங்கும சிமில், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றையும் அன்பின் அடிப்படையாக கொண்டு கடந்த 11 ஆண்டுகளாக வழங்கி வருவதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    தர்மபுரியில் வகுப்பறையை அடித்து நொறுக்கிய அரசு பள்ளி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ பள்ளி மாணவர்கள்
    வானிலை அறிக்கை: மார்ச் 9- மார்ச் 13 வானிலை அறிக்கை
    தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் கேரளா
    ஜெர்மனியில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா அரங்கு உலக செய்திகள்

    மாவட்ட செய்திகள்

    தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள் தமிழ்நாடு
    ஓசூர் அருகே ஏரியில் உற்சாகமாக குளியல் போட்ட 3 யானைகள் இந்தியா
    காஞ்சியில் 11 கின்னஸ் சாதனைகளை படைத்த இளைஞர் தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025