NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழனி முருகர் கோயிலில் தை கிருத்திகை உற்சவம் - மாட்டுவண்டியில் படையெடுத்த பக்தர்கள்
    இந்தியா

    பழனி முருகர் கோயிலில் தை கிருத்திகை உற்சவம் - மாட்டுவண்டியில் படையெடுத்த பக்தர்கள்

    பழனி முருகர் கோயிலில் தை கிருத்திகை உற்சவம் - மாட்டுவண்டியில் படையெடுத்த பக்தர்கள்
    எழுதியவர் Nivetha P
    Jan 31, 2023, 02:57 pm 0 நிமிட வாசிப்பு
    பழனி முருகர் கோயிலில் தை கிருத்திகை உற்சவம் - மாட்டுவண்டியில் படையெடுத்த பக்தர்கள்
    பழனி முருகர் கோயிலில் தை கிருத்திகை உற்சவ விழா-படையெடுத்த பக்தர்கள் கூட்டம்

    பழனி முருகர் கோயிலில் நேற்று(ஜன.,30) தைமாத கிருத்திகை உற்சவவிழா சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. அதனையடுத்து 4,30 மணிக்கு விளாபூஜை, 8மணிக்கு சிறுகாலசந்தி பூஜை ஆகியன நடந்தது என்று கூறப்படுகிறது. பல சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் தொடர்ந்து நடந்த நிலையில், மாலை 5.30 மணிக்கு முருகருக்கு சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கூட்டம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடத்தப்பட்டது, 6.40 மணிக்கு தங்கமயில் வாகன புறப்பாடு மற்றும் 7 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷத்தோடு தங்கரதத்தில் சின்னகுமாரர் புறப்பாடு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    மாட்டு வண்டியில் படையெடுத்து வந்த பொள்ளாச்சி பகுதி பக்தர்கள்

    மேலும் பழனி கோயிலில் நேற்று முன்தினம்(ஜன.,29) தைப்பூச திருவிழா தொடங்கப்பட்ட நிலையில், பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த வண்ணம் உள்ளனர். இதனையொட்டி, பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குழு பாரம்பரிய முறையில் மாட்டு வண்டிகளில் வந்து சாமி தரிசனம் செய்தனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபொழுது, பக்தர்கள் பாதயாத்திரை வருவது போல் தாங்கள் பல தலைமுறையாக மாட்டு வண்டிகளில் வந்து சாமி தரிசனம் செய்வதாக கூறினர். மேலும், பொள்ளாச்சியில் இருந்து நேற்று பழனி சண்முகநதிக்கு வந்து புனித நீராடிய இவர்கள், பின்னர் சாமி தரிசனத்திற்காக பழனிக்கு வந்ததாக கூறினர். சாமி தரிசனம் செய்து முடித்த பின்னர் மீண்டும் மாட்டு வண்டியில் ஊருக்கு திரும்புவார்கள் என்றும் கூறப்பட்டது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்
    'Iron Man' திரைப்பட நாயகன் ராபர்ட் டௌனி ஜூனியர் சாப்பிட்ட சுவிங்கம் ஏலம்! வைரல் செய்தி
    இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்: 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' பொம்மனும், குட்டி யானை ரகுவும் வைரலான ட்வீட்

    தமிழ்நாடு

    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் கர்நாடகா
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    மாவட்ட செய்திகள்

    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்
    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023