NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழனி முருகர் கோயிலில் தை கிருத்திகை உற்சவம் - மாட்டுவண்டியில் படையெடுத்த பக்தர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பழனி முருகர் கோயிலில் தை கிருத்திகை உற்சவம் - மாட்டுவண்டியில் படையெடுத்த பக்தர்கள்
    பழனி முருகர் கோயிலில் தை கிருத்திகை உற்சவ விழா-படையெடுத்த பக்தர்கள் கூட்டம்

    பழனி முருகர் கோயிலில் தை கிருத்திகை உற்சவம் - மாட்டுவண்டியில் படையெடுத்த பக்தர்கள்

    எழுதியவர் Nivetha P
    Jan 31, 2023
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    பழனி முருகர் கோயிலில் நேற்று(ஜன.,30) தைமாத கிருத்திகை உற்சவவிழா சிறப்பாக நடைபெற்றது.

    இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது.

    அதனையடுத்து 4,30 மணிக்கு விளாபூஜை, 8மணிக்கு சிறுகாலசந்தி பூஜை ஆகியன நடந்தது என்று கூறப்படுகிறது.

    பல சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் தொடர்ந்து நடந்த நிலையில், மாலை 5.30 மணிக்கு முருகருக்கு சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

    இதில் பக்தர்கள் கூட்டம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடத்தப்பட்டது, 6.40 மணிக்கு தங்கமயில் வாகன புறப்பாடு மற்றும் 7 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷத்தோடு தங்கரதத்தில் சின்னகுமாரர் புறப்பாடு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    சாமி தரிசனம்

    மாட்டு வண்டியில் படையெடுத்து வந்த பொள்ளாச்சி பகுதி பக்தர்கள்

    மேலும் பழனி கோயிலில் நேற்று முன்தினம்(ஜன.,29) தைப்பூச திருவிழா தொடங்கப்பட்ட நிலையில், பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனையொட்டி, பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குழு பாரம்பரிய முறையில் மாட்டு வண்டிகளில் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இது குறித்து அவர்களிடம் கேட்டபொழுது, பக்தர்கள் பாதயாத்திரை வருவது போல் தாங்கள் பல தலைமுறையாக மாட்டு வண்டிகளில் வந்து சாமி தரிசனம் செய்வதாக கூறினர்.

    மேலும், பொள்ளாச்சியில் இருந்து நேற்று பழனி சண்முகநதிக்கு வந்து புனித நீராடிய இவர்கள், பின்னர் சாமி தரிசனத்திற்காக பழனிக்கு வந்ததாக கூறினர்.

    சாமி தரிசனம் செய்து முடித்த பின்னர் மீண்டும் மாட்டு வண்டியில் ஊருக்கு திரும்புவார்கள் என்றும் கூறப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது போராட்டம்
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    இதய ஆரோக்கியம் முதல் கர்ப்பிணிகள் வரை: ஜவ்வரிசியில் உள்ள நன்மைகள் ஆரோக்கியமான உணவு
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025