NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் சாப்பிட்ட இளம்பெண் மின்சார ரயிலில் மயங்கி விழுந்து சாவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் சாப்பிட்ட இளம்பெண் மின்சார ரயிலில் மயங்கி விழுந்து சாவு
    மெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் சாப்பிட்ட இளம்பெண் மின்சார ரயிலில் மயங்கி விழுந்து சாவு

    மெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் சாப்பிட்ட இளம்பெண் மின்சார ரயிலில் மயங்கி விழுந்து சாவு

    எழுதியவர் Nivetha P
    Apr 04, 2023
    12:56 pm

    செய்தி முன்னோட்டம்

    கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோனிஷா(24),இவர் சென்னை திருவான்மியூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

    நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு மோனிஷா சென்றுள்ளார்.

    அங்கு அவர் பானிபூரி, சுண்டல் போன்றவற்றை உண்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் அவர்கள் திருவல்லிக்கேணி பறக்கும் ரயில்நிலையம் சென்று அங்கிருந்து வேளச்சேரி செல்லும் ரயிலினை பிடித்த ஏறிச்சென்றுள்ளார்கள்.

    அப்போது மைலாப்பூர் நிறுத்தம் வந்த போது மோனிஷா ரயிலிலேயே வாந்தி எடுத்து மயக்கம் போட்டுள்ளார்.

    மோனிஷாவின் உடன்வந்த தோழி ஒருவர் நர்ஸு என்பதால் அவர் முதலுதவி செய்துள்ளார்.

    ஆனால் மோனிஷா எழாத காரணத்தினால் அவரை நண்பர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோனிஷா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    மூச்சுத்திணறல் ஏற்பட்டது

    திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    இதனைதொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோனிஷாவின் நண்பர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் மெரினாவில் பானிப்பூரி,சுண்டல்,சோளம் ஆகியவற்றை சாப்பிட்டதில் இருந்தே சோர்வாக காணப்பட்டார் என்று கூறியுள்ளார்கள்.

    இதனையடுத்து அவற்றை சாப்பிட்டதால் தான் மோனிஷா இறந்தாரா? அல்லது வேறுதுவும் காரணமா? என்னும் கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து ரயில்வே போலீசார், மோனிஷா தனது நண்பர்களுடன் ரயிலை பிடிக்க வேகமாக படிகளில் ஏறிச்சென்றார்.

    அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    இதன் காரணமாக கூட அவர் இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். மோனிஷாவுடன் பானிப்பூரி ஆகியவற்றை சாப்பிட்ட தோழிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மெரினா கடற்கரை
    கடலூர்

    சமீபத்திய

    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ

    சென்னை

    மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு! தங்கம் வெள்ளி விலை
    தங்கம் விலை இன்று ரூ.160 வரை உயர்வு - இன்றைய நாளின் முழு விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு இந்தியா

    மெரினா கடற்கரை

    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மகாபலிபுரம்
    நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார் சென்னை
    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு கமலஹாசன்
    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம் சென்னை

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு காவல்துறை
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025