Page Loader
மெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் சாப்பிட்ட இளம்பெண் மின்சார ரயிலில் மயங்கி விழுந்து சாவு
மெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் சாப்பிட்ட இளம்பெண் மின்சார ரயிலில் மயங்கி விழுந்து சாவு

மெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் சாப்பிட்ட இளம்பெண் மின்சார ரயிலில் மயங்கி விழுந்து சாவு

எழுதியவர் Nivetha P
Apr 04, 2023
12:56 pm

செய்தி முன்னோட்டம்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோனிஷா(24),இவர் சென்னை திருவான்மியூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு மோனிஷா சென்றுள்ளார். அங்கு அவர் பானிபூரி, சுண்டல் போன்றவற்றை உண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் திருவல்லிக்கேணி பறக்கும் ரயில்நிலையம் சென்று அங்கிருந்து வேளச்சேரி செல்லும் ரயிலினை பிடித்த ஏறிச்சென்றுள்ளார்கள். அப்போது மைலாப்பூர் நிறுத்தம் வந்த போது மோனிஷா ரயிலிலேயே வாந்தி எடுத்து மயக்கம் போட்டுள்ளார். மோனிஷாவின் உடன்வந்த தோழி ஒருவர் நர்ஸு என்பதால் அவர் முதலுதவி செய்துள்ளார். ஆனால் மோனிஷா எழாத காரணத்தினால் அவரை நண்பர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோனிஷா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டது

திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

இதனைதொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோனிஷாவின் நண்பர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் மெரினாவில் பானிப்பூரி,சுண்டல்,சோளம் ஆகியவற்றை சாப்பிட்டதில் இருந்தே சோர்வாக காணப்பட்டார் என்று கூறியுள்ளார்கள். இதனையடுத்து அவற்றை சாப்பிட்டதால் தான் மோனிஷா இறந்தாரா? அல்லது வேறுதுவும் காரணமா? என்னும் கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து ரயில்வே போலீசார், மோனிஷா தனது நண்பர்களுடன் ரயிலை பிடிக்க வேகமாக படிகளில் ஏறிச்சென்றார். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக கூட அவர் இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். மோனிஷாவுடன் பானிப்பூரி ஆகியவற்றை சாப்பிட்ட தோழிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.