NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது
    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது

    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது

    எழுதியவர் Nivetha P
    Mar 15, 2023
    05:14 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுதேர்வுகள் அண்மையில் தொடங்கி நடந்து வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுர மாவட்டத்தில் 13917 பிளஸ் 2 தேர்வினையும், 13114 பேர் பிளஸ் 1 தேர்வினையும் எழுதுவதையடுத்து தேர்வுக்காக 53 தேர்வுமையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று(மார்ச்.,15) காலை பிளஸ்1 வகுப்பிற்கான பொதுதேர்வு 10 மணிக்கு துவங்கியது.

    மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று அவர்களுக்கு உதவியாக கூறுவதை எழுத தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    திருப்புட்குழி அரசு மேல்நிலை பள்ளியில் ஒரு மாற்றுத்திறனாளி மாணவி தனக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில் தேர்வினை எழுதி கொண்டுள்ளார்.

    அந்த தேர்வறையின் கண்காணிப்பாளராக ஓரிக்கை பகுதியை சேர்ந்த பிரபல தனியார்பள்ளி ஆசிரியர் நியமிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

    போக்ஸோவில் வழக்குப்பதிவு

    மாற்றுத்திறனாளி மாணவி மற்றும் ஆசிரியரை தனித்தனியாக விசாரித்த போலீஸ்

    அப்போது அவர் அந்த மாணவிக்கு உதவுவது போல், அந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார் என்று தெரிகிறது.

    இதனால் அந்த மாணவி பதற்றமாக காணப்பட்டுள்ளார்.

    பின்னர் அவர் தேர்வு முடிந்த பின்னர் இது குறித்து தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

    அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.

    இந்த புகார் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து அந்த மாணவி மற்றும் அந்த ஆசிரியர் ஜெகநாத் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    அதில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆசிரியரை கைது செய்த போலீசார், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    காவல்துறை
    காவல்துறை
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி ராமேஸ்வரம்
    வானிலை அறிக்கை: மார்ச் 10- மார்ச் 14 வானிலை அறிக்கை
    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை கொரோனா
    பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை பான் கார்டு

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025