NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டிசிஎஸ் நிறுவனத்தில் பணியில் இருந்து அதிகளவில் விலகும் பெண் பணியாளர்கள்.. ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிசிஎஸ் நிறுவனத்தில் பணியில் இருந்து அதிகளவில் விலகும் பெண் பணியாளர்கள்.. ஏன்?
    அதிகளவில் பணியில் இருந்து விலகும் பெண் பணியாளர்கள்

    டிசிஎஸ் நிறுவனத்தில் பணியில் இருந்து அதிகளவில் விலகும் பெண் பணியாளர்கள்.. ஏன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 12, 2023
    01:22 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டிசிஎஸ் நிறுவனமானது, தங்கள் ஊழியர்களை வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாட்களாவது அலுவலகத்திற்கு வந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தியிருந்தது.

    ஊழியர்கள் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரவே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலக வேலையை அமல்படுத்தியதைத் தொடர்ந்து பெண் பணியாளர்கள் பணியில் இருந்து விலகுவது அதகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "பெண் பணியாளர்கள் தங்கள் பணியில் இருந்து விலகுவதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஆனால், அலுவலகத்திலிருந்து வேலை பார்ப்பதை அமல்படுத்தியதையே முதன்மையான காரணமாக நான் கருதுகிறேன்", எனத் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மில்லிண்டு லக்கட்.

    டிசிஎஸ்

    அதிகளவில் வெளியேறும் பெண் பணியாளர்கள்: 

    அதிகளவில் பெண் பணியாளர்கள் பணியில் இருந்து விலகுவது, பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் தங்கள் நிறுவனத்திற்கு பின்னடைவு தான், எனவும் தெரிவித்திருக்கிறார் மில்லிண்டு லக்கட்.

    மேலும், கடந்த நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியில் இணைந்தவர்களில் 38.1% பெண் பணியாளர்களே. தற்போது அந்நிறுவனத்தில் பணிபுரியும் 6 லட்சம் ஊழியர்களில் 35% பெண் பணியாளர்கள் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

    கடந்த நிதியாண்டில் அந்நிறுவனத்தின் தலைமைப் பதவிகளில் 4-ல் ஒரு பங்கு பதவிகளில் பெண் பணியாளர்களே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    அந்நிறுவனத்தில் தற்போது பணியிலிருந்து விலகிய பெண் பணியாளர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தெளிவான கணக்கு அளிக்கப்படவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டிசிஎஸ்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    டிசிஎஸ்

    ரூ.15,000 கோடி மதிப்புடைய BSNL ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா குழுமம்! டாடா
    அலுவலகம் வந்து பணி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா டிசிஎஸ்? இந்தியா
    டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ கிருத்திவாசன்.. யார் இவர்? இந்தியா

    இந்தியா

    'பைபர்ஜாய்' புயலால் கேரள பருவமழை பாதிக்கப்படலாம்: வானிலை ஆய்வு மையம்  கேரளா
    'இந்தியா செல்ல தடையில்லா சான்றிதழ் கிடைக்கல' : அதிருப்தியில் வீடியோ வெளியிட்ட கால்பந்து வீரர்கள்! கால்பந்து செய்திகள்
    ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்! ஒடிசா
     மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு   டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025