NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேலை வாய்ப்புக்காக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேலை வாய்ப்புக்காக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள்
    வேலைவாய்ப்புக்காக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள்

    வேலை வாய்ப்புக்காக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 26, 2023
    02:10 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கி வரும் டிசிஎஸ் நிறுவனத்தில், பணியமர்த்தலுக்காக லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

    டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக கிருத்திவாசன் என்பவர் புதிதாக, இந்த மாதத் தொடக்கத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

    புதிய தலைமை மாறியதையடுத்து, விசில் ப்ளோவர் (Whistle Blower) ஒருவர், டிசிஎஸ் நிறுவனத்தில் பணியமர்த்தலுக்காக, அந்நிறுவனத்தைச் சேர்ந்த E.S.சக்கரவர்த்தி என்பவர் லஞ்சம் பெறுவதாக, சிஇஓ(CEO) மற்றும் சிஓஓ-விடம் (COO) சுட்டிக் காட்டியிருக்கிறார்.

    1997-ல் இருந்து டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாற்றி வரும் சக்கரவர்த்தி, தற்போது அந்நிறுவனத்தின் பணியாளர்கள் நிர்வாகப் பிரிவான Resource Management Group (RMG)-ன் உலகளாவிய தலைவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவரை விடுமுறையில் அனுப்பியிருக்கிறது டிசிஎஸ் நிறுவனம்.

    டிசிஎஸ்

    லஞ்சம் பெற்ற பணியாளர்கள் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: 

    டிசிஎஸ் நிறுவனமானது புதிய ஊழியர்களை, ஒப்பந்த நிறுனங்கள் மூலமே தேர்வு செய்யும்.

    அப்படி புதிய ஊழியர்களை டிசிஎஸ் நிறுவனத்தில் நியமிக்க, டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் நிர்வாகப் பிரிவான RMG-யின் சில முக்கிய அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்றிருக்கின்றனர்.

    வருடத்திற்கு 50,000 ஊழியர்கள் வரை புதிதாக பணியமர்த்தப்படும் டிசிஎஸ் நிறுவனத்தில், ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் புதிதாகப் பணியர்த்த ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.

    இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, அந்தப் பிரிவைச் சேர்ந்த நான்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்து, மூன்று ஒப்பந்த நிறுவனங்களை ப்ளாக்லிஸ்ட் செய்தும் நடவடிக்கை எடுத்திருக்கிறது டிசிஎஸ். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவையும் நியமித்திருக்கிறது அந்நிறுவனம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டிசிஎஸ்
    வணிகம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    டிசிஎஸ்

    ரூ.15,000 கோடி மதிப்புடைய BSNL ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா குழுமம்! டாடா
    அலுவலகம் வந்து பணி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா டிசிஎஸ்? இந்தியா
    டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ கிருத்திவாசன்.. யார் இவர்? இந்தியா
    டிசிஎஸ் நிறுவனத்தில் பணியில் இருந்து அதிகளவில் விலகும் பெண் பணியாளர்கள்.. ஏன்? இந்தியா

    வணிகம்

    அரசின் ONDC தளத்திலும் உணவு டெலிவரி சேவை.. என்னென்ன பின்னடைவுகள்? இந்தியா
    $10 பில்லியன் அளவு ஏற்றுமதி இலக்கு.. பிரதமருடன் வால்மார்ட் சிஇஓ சந்திப்பு! நரேந்திர மோடி
    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்! ரிலையன்ஸ்
    விமானிகளின் ஊதியத்தை உயர்த்திய ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்! இந்தியா

    இந்தியா

    ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து புதிதாக 500 விமானங்களை வாங்கும் இன்டிகோ விமானம்
    புதிய சுற்றுப் பணிநீக்கத்தில் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பைஜூஸ் நிறுவனம் ஸ்டார்ட்அப்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 20 தங்கம் வெள்ளி விலை
    ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர், யார் இந்த பவானி தேவி? வாள்வீச்சு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025