NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம்
    இந்தியா

    தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம்

    தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம்
    எழுதியவர் Nivetha P
    Mar 15, 2023, 06:48 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம்
    தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம்

    புதுச்சேரியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தமிழகத்திலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுமா? என சுகாதாரத்துறை அமைச்சரான மா.சுப்ரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு அவர் தனது விளக்கத்தினை அளித்துள்ளார். அதன்படி, காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான அவசியம் இல்லை. தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். பொதுமக்கள் அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

    ஆய்வு மேற்கொள்ள வற்புறுத்தியுள்ளதாக தகவல்

    இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் முன்னதாக சென்னை வேளச்சேரியில் சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம். பின்னர் தொடர்ந்து பேசிய அவர், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இன்ஃபுளூயன்சா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய 476 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா பரவலுக்கு பிறகு இளம் வயதினர் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், இது குறித்து இதய நிபுணர்களிடம் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    சுகாதாரத் துறை

    தமிழ்நாடு

    தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  ஆர்ப்பாட்டம்
    வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது  திமுக
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது பாஜக
    '10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை  திருப்பூர்

    சுகாதாரத் துறை

    புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவாகவே உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா
    கொரோனா தயார்நிலையைச் சரிபார்க்க இன்று முதல் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி இந்தியா
    அடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு இந்தியா
    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023