LOADING...
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: இன்றும், நாளையும் இந்த மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை!
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: இன்றும், நாளையும் இந்த மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை!

எழுதியவர் Vasuki Ravichandran
Apr 05, 2026
05:32 pm

செய்தி முன்னோட்டம்

கோடை வெயில் ஒருபுறம் வாட்டி வதைத்தாலும், வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை குளிர்வித்து வருகிறது. இதுகுறித்து இன்று (ஏப்ரல் 5) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சுமார் 0.5 கிமீ உயரத்தில் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை வரை தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. ராயலசீமா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாகத் தமிழகத்தில் இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகுறித்த விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்

கனமழை எச்சரிக்கை

இன்று (ஏப்ரல் 5) தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, விருதுநகர், தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (ஏப்ரல் 6) தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை தொடரும். விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 7 - 11 கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும்.

வானிலை நிலவரம்

வெப்பநிலை மற்றும் மழை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம் ஊத்து மற்றும் நாலுமுக்கு பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக வேலூரில் 40.3° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது. சமவெளிப் பகுதிகளில் சேலத்தில் 23.1° செல்சியஸும், மலைப் பகுதிகளில் கொடைக்கானலில் 11.7° செல்சியஸும் பதிவாகியுள்ளது.கையும் விடுக்கப்படவில்லை.

Advertisement

வானிலை முன்னறிவிப்பு

மீனவர்களுக்கான தகவல்

இன்று முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை தமிழகக் கடலோரம், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு எந்தவிதமான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. கடல் நிலை சாதாரணமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement