NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம்
    தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது.

    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 27, 2023
    05:30 pm

    செய்தி முன்னோட்டம்

    RSS பேரணி நடத்துவதற்கு அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன் மற்றும் பங்கஜ் மிட்டல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது.

    அமைதியான முறையில் பொது ஊர்வலங்களை நடத்துவது பேசுவதற்கான சுதந்திரத்தின் ஒரு பகுதி என்று உயர் நீதிமன்றம் கூறி இருந்ததது.

    அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு, RSS தனது பேரணிகளை ஸ்டேடியம் போன்ற மூடிய வளாகத்திற்குள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) போன்ற அமைப்புகளின் அணிவகுப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் இருப்பதாகக் கூறி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

    இந்தியா

    போலியான வீடியோக்களால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது: தமிழக அரசு

    கடந்த மார்ச் 17 அன்று நடந்த விசாரணையின் போது, ​​போலியான வீடியோக்களால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பீதியை மேற்கோள் காட்டி, நீதிமன்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசு கோரியது.

    RSS சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, ஒரு அமைப்பின் அமைதிப் பேரணிகளை அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தக் கூடாது என்றும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது அரசின் பொறுப்பு என்றும் வாதிட்டார்.

    PFI ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

    தமிழக அரசு, ஒரே நேரத்தில் 50 இடங்களில் RSS பேரணி நடத்த கூடாது, 5 இடங்களில் நடத்தி கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 1,249 கொரோனா பாதிப்புகள் கொரோனா
    மெர்சிடிஸ் பென்ஸ் காரின் புதிய GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்! கார் உரிமையாளர்கள்
    கிரிசில் ரேட்டிங் வெளியிட்ட சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீட்டு திட்டங்கள்
    வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வீடியோ கால் வசதி! புதிய அம்சங்கள் என்ன? வாட்ஸ்அப்

    தமிழ்நாடு

    ஆஸ்கார் விருது வென்ற , 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் ஸ்டாலின் ஆஸ்கார் விருது
    அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது மாவட்ட செய்திகள்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது வைரல் செய்தி
    வானிலை அறிக்கை: மார்ச் 21- மார்ச் 25 புதுச்சேரி

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி இந்தியா
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025