
செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்
செய்தி முன்னோட்டம்
மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) பொது ஒப்புதலை, திரும்பப் பெறுவதாக தமிழக அரசு நேற்று (ஜூன் 14.,) அறிவித்துள்ளது.
CBI, ஒரு மத்திய நிறுவனமாக இருந்தாலும், அது டெல்லி சிறப்பு காவல் ஸ்தாபனச் சட்டத்தின் (DPSEA) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. எனவே அதன் அசல் அதிகார வரம்பு, டெல்லிக்கு மட்டுமே.
மற்ற மாநிலங்களில் விசாரணை நடத்த அந்தந்த மாநிலத்தின் ஒப்புதல் அவசியம்.
ஏற்கனவே, மேற்கு வங்காளம், கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தாங்கள் கொடுத்திருந்த அனுமதியை ரத்து செய்த நிலையில், தற்போது தமிழ்நாடும் அனுமதியை ரத்து செய்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட பிறகு இந்த அறிவிப்பு வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சிபிஐ அனுமதி ரத்து
#BREAKING | "தமிழகத்தில் இனி சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெற வேண்டும்"
— Thanthi TV (@ThanthiTV) June 14, 2023
சிபிஐக்கு அளிக்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை திரும்ப பெற்றது தமிழக அரசு
மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலங்கானாவில் இதுபோன்ற உத்தரவு… pic.twitter.com/9jSyZptabn