NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில்  6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை!
    செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் (படம்: இந்து தமிழ்)

    தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 16, 2022
    03:28 pm

    செய்தி முன்னோட்டம்

    விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுப்பதற்காக அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு 6 மாதங்கள் வரைத் தற்காலிக தடை விதித்துள்ளது.

    மேலும், மஞ்சள் பாஸ்பரஸ் எனும் எலிக் கொல்லி மருந்துக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடை செய்யப்பட்ட 6 பூச்சிக்கொல்லிகள்:

    ப்ரோஃபினோபோஸ் (Profenophos), மோனோக்ரோடோபோஸ் (Monocrothophos), அசபேட்(Acephate), குளோர் பைரிபோஸ் சைபர்மெத்ரின்(Chlorpyriphos Cypermethrin), ப்ரோஃபினோபோஸ் சைபர்மெத்ரின் (Profenophos Cypermethrin), குளோர்பைரிபோஸ் (Chlorpyriphos)

    இந்த பொருட்களின் சில்லறை விற்பனையும் மொத்த விற்பனையும் ஆன்லைன் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கும் இது குறித்து கடிதம் எழுதப்படும். தடையை மீறி விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    விவசாயி நலன்

    எதற்காக இந்த தடை?

    2017-18ஆம் ஆண்டில் நிகழ்ந்த விவசாயிகள் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தது பூச்சிக்கொல்லி மருந்துகளே என்று வேளாண் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    மஞ்சள் பாஸ்பரஸ் எனும் எலிக் கொல்லி மருந்துகள் முறையாகப் பதிவு செய்யப்படாதவை. ஆனால், இது மாநிலம் முழுவதும் சின்ன பெட்டி கடைகளில் கூட கிடைக்கிறது என்றும் வேளாண் இயக்குநரகம் தெரிவித்தது.

    மேலும், விஷத்தன்மைக் கொண்ட இது போன்ற மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்தாக இருப்பதால் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

    இதையடுத்து, விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுப்பதற்கும் வேறு ஆபத்துகள் நிகழாமல் இருப்பதற்கும் இந்த அதிரடி முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    விவசாயி தற்கொலை

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! அமெரிக்கா

    விவசாயி தற்கொலை

    தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025