NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை!
    இந்தியா

    தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை!

    தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 16, 2022, 03:28 pm 1 நிமிட வாசிப்பு
    தமிழ்நாட்டில்  6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை!
    செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் (படம்: இந்து தமிழ்)

    விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுப்பதற்காக அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு 6 மாதங்கள் வரைத் தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும், மஞ்சள் பாஸ்பரஸ் எனும் எலிக் கொல்லி மருந்துக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட 6 பூச்சிக்கொல்லிகள்: ப்ரோஃபினோபோஸ் (Profenophos), மோனோக்ரோடோபோஸ் (Monocrothophos), அசபேட்(Acephate), குளோர் பைரிபோஸ் சைபர்மெத்ரின்(Chlorpyriphos Cypermethrin), ப்ரோஃபினோபோஸ் சைபர்மெத்ரின் (Profenophos Cypermethrin), குளோர்பைரிபோஸ் (Chlorpyriphos) இந்த பொருட்களின் சில்லறை விற்பனையும் மொத்த விற்பனையும் ஆன்லைன் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கும் இது குறித்து கடிதம் எழுதப்படும். தடையை மீறி விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    எதற்காக இந்த தடை?

    2017-18ஆம் ஆண்டில் நிகழ்ந்த விவசாயிகள் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தது பூச்சிக்கொல்லி மருந்துகளே என்று வேளாண் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மஞ்சள் பாஸ்பரஸ் எனும் எலிக் கொல்லி மருந்துகள் முறையாகப் பதிவு செய்யப்படாதவை. ஆனால், இது மாநிலம் முழுவதும் சின்ன பெட்டி கடைகளில் கூட கிடைக்கிறது என்றும் வேளாண் இயக்குநரகம் தெரிவித்தது. மேலும், விஷத்தன்மைக் கொண்ட இது போன்ற மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்தாக இருப்பதால் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுப்பதற்கும் வேறு ஆபத்துகள் நிகழாமல் இருப்பதற்கும் இந்த அதிரடி முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    விவசாயி தற்கொலை

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    தமிழ்நாடு

    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழக காவல்துறை
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி

    விவசாயி தற்கொலை

    தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை! தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023