NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் கொரோனா பரபரப்பு: மத்திய மாநில அரசுகள் ஆலோசனை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் கொரோனா பரபரப்பு: மத்திய மாநில அரசுகள் ஆலோசனை!
    கொரோனாவைத் தடுக்க தனித்தனியாக ஆலோசனை நடத்தும் மத்திய மாநில அரசுகள்!(படம்: News 18 Tamilnadu)

    மீண்டும் கொரோனா பரபரப்பு: மத்திய மாநில அரசுகள் ஆலோசனை!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 25, 2022
    10:20 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவில் அதிவேகமாக பரவி வரும் BF.7 கொரோனா இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதால் மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிர படுத்தி இருக்கின்றனர்.

    இது குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.

    அதே போல், தமிழ்நாட்டில் தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா பாதுகாப்பிற்கான ஒரு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதுவரை, இந்த BF.7 வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இன்னும் பரவிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

    சீனாவில் கொரோனாவின் எண்ணிக்கை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருப்பதால் உலக நாடுகள் எல்லாம் இதே பீதியில் தான் இருக்கிறார்கள்.

    தமிழகம்

    கொரோனாவைத் தடுக்க எடுக்கப்பட்ட முடிவுகள்!

    தமிழக ஆலோசனைக் கூட்டத்தில் கீழுள்ள முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன:

    தமிழகத்திற்குள் வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    பரிசோதனை செய்யப்பட்ட பயணிகளைத் தொடர்ந்து கண்காணித்து கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

    தமிழகத்தில் இருக்கும் சர்வேதேச விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிர படுத்த முடிவு செய்துள்ளனர்.

    கொரோனாவை தடுக்க இன்று இந்திய அளவில் எடுக்கப்பட்ட முயற்சிகள்:

    தாஜ்மகாலுக்கு செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    மக்களவைக்குள் இனி எல்லோரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் வலியுறுத்தி இருக்கிறார்.

    மேலும், மக்கள் முகக்கவசம் அணிவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் இன்று மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! உலகம்
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! வைரஸ்

    தமிழ்நாடு

    தமிழ்த் திரையுலகில் 20 வருடங்களாக ஆதிக்ககம் செலுத்தி வரும் த்ரிஷா த்ரிஷா
    1000 விளக்குகளால் உருவான ஸ்ரீரங்கம் கோயிலின் ராஜகோபுரம் இந்தியா
    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா? ஸ்டாலின்
    2023 ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நிச்சயம் நடக்குமா? - தமிழக அரசு அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025