NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிவகங்கையில் பாஜக தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரம்: திமுகவை கடுமையாக சாடும் பாஜக 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிவகங்கையில் பாஜக தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரம்: திமுகவை கடுமையாக சாடும் பாஜக 

    சிவகங்கையில் பாஜக தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரம்: திமுகவை கடுமையாக சாடும் பாஜக 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 28, 2024
    05:57 pm

    செய்தி முன்னோட்டம்

    சிவகங்கையில் பாஜக பிரமுகர் ஒருவர் நேற்று இரவு ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதாக கூறி திமுக அரசை மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

    சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், அந்த கொலை அரசியல் பிரச்சனையால் நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.

    சிவகங்கை பாஜக மாவட்ட செயலாளராக இருந்த செல்வகுமார், நேற்று தனக்கு சொந்தமான செங்கல் சூளையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​தாக்கப்பட்டார்.

    ஒரு கும்பல் அவரைச் சுற்றி வளைத்து, வெட்டி கொன்றது.

    அந்த வழியாக சென்றவர்கள் செல்வகுமாரை ரத்த வெள்ளத்தில் பார்த்துவிட்டு, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், செல்வகுமார் இறந்து கிடந்ததைக் கண்டனர்.

    தமிழகம் 

    சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  பாஜகவினர் 

    அதன் பிறகு, போலீசார் செல்வகுமாரின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    செல்வகுமாரின் கொலையை கண்டித்து கிராம மக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் சாலை மறியல் செய்து அவரது உடலை ஏற்க மறுத்தனர். இந்நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, செல்வகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், கட்சி சார்பில் ஆதரவளிக்கப்படும் என உறுதியளித்தார்.

    தமிழகத்தை "கொலைகளின் தலைநகரம்" என்று கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை, "காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் அரசியல் நாடகம் நடத்துகிறார்." என்று தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்
    பாஜக

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழகம்

    தமிழகத்தில் களைகட்டிய பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: நாகூரில் சிறப்பு தொழுகை தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி

    பாஜக

    சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை ஆதரிக்க இருப்பதாக தகவல்  இந்தியா
    பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர் மோடி: ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல்  மக்களவை
    2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: தமிழகத்தில் பாஜக தோல்விக்கு பிறகு அண்ணாமலை அண்ணாமலை
    "மக்களின் தீர்க்கமான தீர்ப்பு மோடிக்கு எதிராக உள்ளது": இண்டியா கூட்டணி கூட்டத்தில் கார்கே பேச்சு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025