NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரிவு 19: உரிமைகளை தனிநபர்களுக்கு எதிராகவும் செயல்படுத்தப்படலாம்!
    இந்தியா

    பிரிவு 19: உரிமைகளை தனிநபர்களுக்கு எதிராகவும் செயல்படுத்தப்படலாம்!

    பிரிவு 19: உரிமைகளை தனிநபர்களுக்கு எதிராகவும் செயல்படுத்தப்படலாம்!
    எழுதியவர் Sindhuja SM
    Jan 05, 2023, 12:34 pm 1 நிமிட வாசிப்பு
    பிரிவு 19: உரிமைகளை தனிநபர்களுக்கு எதிராகவும் செயல்படுத்தப்படலாம்!
    அமைச்சர்களின் பேச்சுரிமைக்கு கூடுதல் தடை இல்லை: உச்ச நீதிமன்றம்

    அடிப்படை உரிமைகள் சட்டப்பிரிவு 19 மற்றும் 21ஐ தனிநபர் மற்றும் நிறுவங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளைத் தவிர அடிப்படை உரிமைகள் சட்டப்பிரிவு 19 மற்றும் 21ஐ தனிநபர் மற்றும் தனியார் நிறுவங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. "இந்த உரிமைகளை அரசுக்கு எதிராக மட்டுமே செயல்படுத்த முடியும் என்ற நிலைமை காலப்போக்கில் மாறிவிட்டது." என்று நீதிபதி ராமசுப்ரமணியன் தான் எழுதிய தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். "ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக 21வது சட்டப்பிரிவின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது." என்றும் இந்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறி இருக்கிறது.

    இந்த அமர்வில் உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் பிற தீர்ப்புகள்:

    அமைச்சர்கள் கூறும் கருத்துகளுக்கு அரசு பொறுப்பேற்காது. சட்டப்பிரிவு 19(1)(a)க்கு கீழ் கூறப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துரிமை அனைவருக்கும் பொருந்தும். இந்த உரிமைகளை சட்டப்பிரிவு 19(2)இல் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அமைச்சர்கள், சட்டமன்றத்திற்கு/அமைச்சரவைக்கு வெளியே பேசும் கருத்துக்களைக் கூட்டு பொறுப்பாக கருத முடியாது. "ஆனால், ஒருவேளை அந்த அமைச்சரின் பேச்சு அரசாங்கத்தின் கருத்துக்களையும் உள்ளடக்கி இருந்தால் அதை கூட்டு பொறுப்பாக கருதலாம்." என்று நீதிபதி பி.வி நாகரத்னா தனது தனி தீர்ப்பில் கூறி இருகிறார். அமைச்சர்கள், இரண்டு விதமான கருத்துக்களை வெளியிடலாம். 1. தனிப்பட்ட கருத்துக்கள் 2. அரசாங்க பிரதிநிதி என்ற முறையில் வெளியிடும் அதிகாரபூர்வ கருத்துக்கள். இதில் முதல் நிலை கருத்துக்களுக்கு அரசாங்கம் பொறுப்பாகாது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா

    இந்தியா

    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு கொரோனா
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் நாடாளுமன்றம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023