NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரிவு 19: உரிமைகளை தனிநபர்களுக்கு எதிராகவும் செயல்படுத்தப்படலாம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரிவு 19: உரிமைகளை தனிநபர்களுக்கு எதிராகவும் செயல்படுத்தப்படலாம்!
    அமைச்சர்களின் பேச்சுரிமைக்கு கூடுதல் தடை இல்லை: உச்ச நீதிமன்றம்

    பிரிவு 19: உரிமைகளை தனிநபர்களுக்கு எதிராகவும் செயல்படுத்தப்படலாம்!

    எழுதியவர் Sindhuja SM
    Jan 05, 2023
    12:34 pm

    செய்தி முன்னோட்டம்

    அடிப்படை உரிமைகள் சட்டப்பிரிவு 19 மற்றும் 21ஐ தனிநபர் மற்றும் நிறுவங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளைத் தவிர அடிப்படை உரிமைகள் சட்டப்பிரிவு 19 மற்றும் 21ஐ தனிநபர் மற்றும் தனியார் நிறுவங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    "இந்த உரிமைகளை அரசுக்கு எதிராக மட்டுமே செயல்படுத்த முடியும் என்ற நிலைமை காலப்போக்கில் மாறிவிட்டது." என்று நீதிபதி ராமசுப்ரமணியன் தான் எழுதிய தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

    "ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக 21வது சட்டப்பிரிவின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது." என்றும் இந்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறி இருக்கிறது.

    தீர்ப்பு

    இந்த அமர்வில் உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் பிற தீர்ப்புகள்:

    அமைச்சர்கள் கூறும் கருத்துகளுக்கு அரசு பொறுப்பேற்காது.

    சட்டப்பிரிவு 19(1)(a)க்கு கீழ் கூறப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துரிமை அனைவருக்கும் பொருந்தும்.

    இந்த உரிமைகளை சட்டப்பிரிவு 19(2)இல் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

    அமைச்சர்கள், சட்டமன்றத்திற்கு/அமைச்சரவைக்கு வெளியே பேசும் கருத்துக்களைக் கூட்டு பொறுப்பாக கருத முடியாது.

    "ஆனால், ஒருவேளை அந்த அமைச்சரின் பேச்சு அரசாங்கத்தின் கருத்துக்களையும் உள்ளடக்கி இருந்தால் அதை கூட்டு பொறுப்பாக கருதலாம்." என்று நீதிபதி பி.வி நாகரத்னா தனது தனி தீர்ப்பில் கூறி இருகிறார்.

    அமைச்சர்கள், இரண்டு விதமான கருத்துக்களை வெளியிடலாம்.

    1. தனிப்பட்ட கருத்துக்கள்

    2. அரசாங்க பிரதிநிதி என்ற முறையில் வெளியிடும் அதிகாரபூர்வ கருத்துக்கள்.

    இதில் முதல் நிலை கருத்துக்களுக்கு அரசாங்கம் பொறுப்பாகாது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    யூபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய போகிறீர்களா? இதை முதலில் படியுங்கள் பணம் டிப்ஸ்
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு திருப்பதி
    தொழில்முனைவில் முன்னணியில் இருக்கும் தமிழக பெண்கள்! தமிழ்நாடு
    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உயிரிழந்தார்! மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025