NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளை விசாரிக்கும் மாநில மனித உரிமைகள் ஆணையம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளை விசாரிக்கும் மாநில மனித உரிமைகள் ஆணையம்
    சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளை விசாரிக்கும் மாநில மனித உரிமைகள் ஆணையம்

    சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளை விசாரிக்கும் மாநில மனித உரிமைகள் ஆணையம்

    எழுதியவர் Nivetha P
    Apr 11, 2023
    12:53 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீ நாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    இதன் பின்னர் காவல்துறை, மாநில மகளிர் ஆணையம் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

    இதனையடுத்து மாணவிகள் குறிப்பிட்ட 4 பேர் மீது எழுத்துபூர்வமாக புகார் அளித்த நிலையில், பேராசிரியர் ஹரி பத்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    மற்ற 3 பேர் தற்காலிக ஆசிரியர்கள் என்பதால் பணி நீக்கம் செய்வதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

    இதனை தொடர்ந்து கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையினை மேற்கொண்டுள்ளது

    வழக்கு நீர்த்துபோகக்கூடும்

    2 டிஎஸ்பி.க்கள், பெண்காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் இந்த விசாரணையில் ஈடுபாடு

    அதன்படி மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐஜி., பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விரிவான விசாரணையினை நடத்தி 6 வாரத்தில் அறிக்கையளிக்குமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதனைதொடர்ந்து கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு நடந்த பாலியல்தொல்லை குறித்து கல்லூரியில் மனிதஉரிமைகள் ஆணைய அதிகாரிகள் இன்று(ஏப்ரல்.,11) நேரில் சென்று தங்கள் விசாரணையினை நடத்திவருகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    அதன்படி 2 டிஎஸ்பி.க்கள், பெண்காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.

    இதற்கிடையே மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது எனவே, விசாரணையினை வரும் 13ம்தேதி வைத்து கொள்ளுங்கள் என்று கலாஷேத்ரா நிர்வாகம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

    அதற்கு அதிகாரிகள் தேர்வுகள் முடிந்தப்பின்னர் விசாரணை என்றால் இந்த வழக்கு நீர்த்துப்போகக்கூடும் என்று விளக்கமளித்து விசாரணையினை துவங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மனித உரிமைகள் ஆணையம்

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    சென்னை

    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர் காவல்துறை
    சென்னை ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு என தகவல் தமிழ்நாடு
    சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா? தொழில்நுட்பம்
    எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை

    மனித உரிமைகள் ஆணையம்

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம் விழுப்புரம்
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம் திருநெல்வேலி
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு விசாரணைக்கு ஏற்பு திருநெல்வேலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025