NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர்
    இந்தியா

    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர்

    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர்
    எழுதியவர் Nivetha P
    Feb 24, 2023, 01:01 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர்

    தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த வேல்முருகன்(42) என்பவரது பைபர் படகில் பாலசுப்ரமணியன்(40), அருண்குமார்(26), மாதவன்(36), கார்த்திக்(32), முருகன்(54) ஆகிய 6 பேரும் கடந்த 21ம்தேதி தரங்கம்பாடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்கள். நேற்று(பிப்.,23) அதிகாலை 4.30மணியளவில் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இரும்பு குழாய்களை கொண்டு தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கியுள்ளார்கள். தொடர்ந்து அவர்களின் மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ்.கருவி, பேட்டரி உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் நடத்திய தாக்குதலில் 6பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளதோடு, ஒருவருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. தரங்கம்பாடி மருத்துவமனையில் இவர்கள் சிகிச்சைபெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

    உயர்மட்ட அளவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இந்த சம்பவம் குறித்து மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் குழுமபோலீசாரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். அதன்படி, இலங்கை கடற்படையினர் மீது கூட்டுக்கொள்ளை, கொடூரமாக தாக்குதல், அத்துமீறி நுழைந்து திருடுதல் உள்ளிட்ட 3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவு துறையமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில் அவர் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்தாக்குதல் நடத்துவதை கண்டித்தும், இதற்கு நிரந்தர தீர்வுகாணவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து இலங்கை அரசிடம் வலுவாக எடுத்து சென்று, இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலை தவிர்க்க உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதரக வழிமுறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    இலங்கை
    கடற்படை

    தமிழ்நாடு

    காரைக்குடி திரையரங்கு கேன்டீனில் பப்ஸ் சாப்பிடும் பூனை - உணவு விற்பனைக்கு தடை திரையரங்குகள்
    சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி  போராட்டம்
    பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்  கோவை
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழகம்

    இலங்கை

    ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை உலகம்
    சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா இந்தியா
    அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி! பிரபாத் ஜெயசூர்யா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்! டெஸ்ட் கிரிக்கெட்
    இலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் வெளியுறவுத்துறை

    கடற்படை

    இந்தியப் பெருங்கடலில் ரூ.25,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் இந்தியா
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023