NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த ஷங்கர் மிஷ்ராவிற்கு ஜாமீன் தர மறுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த ஷங்கர் மிஷ்ராவிற்கு ஜாமீன் தர மறுப்பு
    ஷங்கர் மிஷ்ராவிற்கு ஜாமீன் மறுப்பு

    ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த ஷங்கர் மிஷ்ராவிற்கு ஜாமீன் தர மறுப்பு

    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023
    04:19 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த நவம்பர் 26ம் தேதி நியூயார்க் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஷங்கர் மிஷ்ரா என்னும் பயணி மது போதையில் 70 வயது மதிக்கத்தக்க சக பயணியான ஓர் பெண்ணின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

    இது குறித்து அப்பெண் விமானத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனையடுத்து அப்பெண் டாடா குழும தலைவருக்கு கடிதம் எழுதினார்.

    அதன்பிறகே, 34 வயது கொண்ட ஷங்கர் மிஷ்ரா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதோடு 30 நாட்கள் விமானத்தில் பயணம் செய்ய தடையும் விதிக்கப்பட்டது.

    14 நாட்கள் சிறை

    போலீஸ் விசாரணைக்கும் தடை

    மும்பை மாநிலத்தை சேர்ந்த ஷங்கர் மிஷ்ரா மீது டெல்லி போலீசார் தேடி வந்தனர்.

    இதனையடுத்து, பெங்களூரில் தலைமறைவாக இருந்த அவரை கண்டறிந்த போலீசார் கைது செய்தனர்.

    சம்பவம் நடந்து 6 வாரங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஷங்கர் மிஷ்ரா சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதுகுறித்த விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கோமல் கார்க் ஷங்கர் மிஷ்ராவை விடுவிப்பது சரியல்ல என்று கூறினார்.

    அதே நேரம், போலீஸ் காவலில் அவரை எடுத்து விசாரிக்க மறுத்த நீதிபதி, நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    விமானம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு வானூர்தி
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமான சேவைகள்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025