தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் காலண்டர் படி, இன்றோடு(ஏப்ரல்.,28)பள்ளி பணிகள் நிறைவடைகிறது. இதனால் நாளை(ஏப்ரல்.,29)முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர், தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பின்னர் 6-12ம்வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும். 1-5ம்வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல் அடுத்த கல்வியாண்டில் மார்ச் 18.,12ம்வகுப்பிற்கும், ஏப்ரல் 8ம்தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த கல்வியாண்டிற்கான புத்தகங்களும், பொருட்களும் தாமதமின்றி மாணவர்களுக்கு வழங்கப்படும். விடுமுறை நாட்களில் சிறுவர்கள் நீர்நிலைக்கு செல்லவேண்டாம். பெற்றோர்கள் குழந்தைகளை விடுமுறை நாட்களில் நூலகத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.