NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு 
    ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும் அது வெளியிடப்பட்டிருந்தால் அதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.

    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 02, 2023
    07:03 pm

    செய்தி முன்னோட்டம்

    வனப் பாதுகாப்பு (திருத்த) மசோதா-2023 மீதான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 2) ரத்து செய்துள்ளது.

    வனப் பாதுகாப்பு(திருத்த) மசோதாவின் ஆவணங்கள் ஆங்கிலம், இந்தி தவிர பிற மொழிகளில் வெளியிடப்படாததால், அதை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன் பிறகு, வரும் திங்கள்கிழமைக்குள் மசோதாவின் தமிழாக்கம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்ததை அடுத்து, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது .

    இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு(ஜேபிசி) பரிசீலித்து வரும் நிலையில், மே 3ஆம் தேதி அன்று இதற்கான விளம்பரம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டது.

    details

    திங்கள்கிழமைக்குள் மசோதாவின் தமிழாக்கம் வெளியிடப்படும்

    ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும் அது வெளியிடப்பட்டிருந்தால் அதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.

    அதனையடுத்து, இந்த மசோதாவை தமிழில் மொழிபெயர்க்கவும், தமிழ் மொழியில் பரிந்துரைகளை ஏற்கவும் உத்தரவிடக் கோரி தீரன் திருமுருகன் என்பவர் ஒரு ரிட் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், "ஒரு முக்கியமான திருத்த மசோதாவை நிறுத்தி வைக்க விரும்பவில்லை என்றாலும், நாட்டின் அனைத்து மொழிகளிலும் திருத்த மசோதாவின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகள் மற்றும் பத்திரிகை செய்திகளை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். அதற்காக மசோதாவை நிறுத்தி வைப்பது அவசியம்" என்று கூறியது.

    இந்நிலையில், வரும் திங்கள்கிழமைக்குள் மசோதாவின் தமிழாக்கம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உயர்நீதிமன்றம்
    உச்ச நீதிமன்றம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்
    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் மருத்துவக் கல்லூரி
    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை! மல்யுத்தம்
    கடந்த நிதியாண்டில் பாதியாகக் குறைந்த வங்கி மோசடி மதிப்பு.. ரிசர்வ் வங்கியின் அறிக்கை! ரிசர்வ் வங்கி

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    திருமணம் மறுக்கப்படுவது குடியுரிமை மறுக்கப்படுவதற்கு சமம்: ஒரே பாலின திருமணங்களுக்கான இறுதி வாதம் இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில்  இந்தியா

    மத்திய அரசு

    மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு  இந்தியா
    ராமேஸ்வரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் நாளை முதல் மீன்பிடிக்க செல்லலாம் - மீன்வளத்துறை  ராமநாதபுரம்
    2027-ம் ஆண்டு முதல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பரிந்துரைக்கும் மத்திய அமைச்சகம்! ஆட்டோமொபைல்
    இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்  கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025