NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை

    எழுதியவர் Nivetha P
    Feb 07, 2023
    11:31 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ள காரணத்தினால் 5 புதிய கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி, அவர்களையடுத்து வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

    இவர்களுக்கு இன்று(பிப்.,7) சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவி பிராமணம் செய்து வைக்கவுள்ளார்.

    இதனால் தற்போது சென்னை உயர்நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 57ஆக அதிகரித்துள்ளது, காலியிடங்கள் 18ஆக உள்ளது.

    இதனிடையே, மத்திய அரசு வழக்கறிஞராக விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சார்பில் குடியரசு தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    சர்ச்சை கருத்துக்கள்

    சிறுபான்மை மக்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு

    அந்த கடிதத்தில் விக்டோரியா கவுரி இந்திய நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல வெறுப்பு மிகுந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார், அந்த பதிவுகள் இன்னமும் இணையத்தில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், ஓர் பேட்டியில் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை விட அபாயமானவர்கள் என்றும், கிறிஸ்தவ பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடக்கூடாது போன்ற சர்ச்சையான கருத்துக்களையும் தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியின் தேசிய பொதுச்செயலாளராக பொறுப்பு வகிக்கும் இவர், அந்த கட்சிக்கும், கொள்கைகளுக்கும் விசுவாசமாக உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ள நிலையில், அவர் பதவியேற்கும் நாளான இன்று இதன் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

    இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி இந்தியா
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025