NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு  
    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு  
    இந்தியா

    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு  

    எழுதியவர் Nivetha P
    September 14, 2023 | 03:31 pm 0 நிமிட வாசிப்பு
    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு  
    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில், இன்று(செப்.,14)ஆவணிமாத சர்வ அமாவாசை என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு சென்று அக்னித்தீர்த்த கடலில் நீராடி, திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அதன்பின்னர் ராமநாதசுவாமி கோயிலில் 22 தீர்த்த கிணறுகளில் நீராடி, சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே இன்று பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதனையொட்டி 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், வருகை தரும் பக்தர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல், எவ்வித இடையூறும் இல்லாமல் பக்தர்கள் நீராடி சாமி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.

    ஏழ்மை நிலையை மாற்றும் அமாவாசை வழிபாடு 

    அனைத்து அமாவாசை தினங்களிலும் குறிப்பாக ஆவணி மாதத்தில் வரும் இந்த சர்வ அமாவாசை தினத்தன்று நமது பித்ருக்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வதோடு, காக்கைக்கு உணவளித்து ஆசீர்வாதம் பெறுவது அவசியம் என்று கூறப்படுகிறது. இத்தகைய வழிபாடுகளால் பித்ரு சாபங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வினை அடையலாம் என்றும் கூறுகிறார்கள். இந்த தினத்தில் வீட்டின் வாசலை சுத்தம் செய்யலாம், ஆனால் கோலமிட கூடாது. பெற்றோர் இல்லாத ஆண்கள் எள்ளும், தண்ணீரும் கொடுத்து கட்டாயம் தர்ப்பணம் செய்யவேண்டும். நமது முன்னோர்களை நினைத்து இவ்வாறு வழிபாடு மேற்கொள்வதன் மூலம் வீட்டில் ஏழ்மை நிலை மாறுவதுடன், எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ராமேஸ்வரம்
    குடிநீர்

    ராமேஸ்வரம்

    தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு திருச்சி
    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புத்தகத்தினை வெளியிட்டார் அமித்ஷா - சர்ச்சை பேச்சால் பரபரப்பு  அமித்ஷா
    ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையேயான ரயில்வே திட்டத்தினை கைவிட கோரும் தமிழக அரசு மத்திய அரசு
    ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17ஆம் தேதி விடுமுறை ராமநாதபுரம்

    குடிநீர்

    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தமிழக தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு  தேனி
    தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார் தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023