NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு  
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு  
    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு

    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு  

    எழுதியவர் Nivetha P
    Sep 14, 2023
    03:31 pm

    செய்தி முன்னோட்டம்

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

    இந்நிலையில், இன்று(செப்.,14)ஆவணிமாத சர்வ அமாவாசை என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு சென்று அக்னித்தீர்த்த கடலில் நீராடி, திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    அதன்பின்னர் ராமநாதசுவாமி கோயிலில் 22 தீர்த்த கிணறுகளில் நீராடி, சாமி தரிசனம் செய்தனர்.

    இதனிடையே இன்று பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதனையொட்டி 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், வருகை தரும் பக்தர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதேபோல், எவ்வித இடையூறும் இல்லாமல் பக்தர்கள் நீராடி சாமி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.

    அமாவாசை 

    ஏழ்மை நிலையை மாற்றும் அமாவாசை வழிபாடு 

    அனைத்து அமாவாசை தினங்களிலும் குறிப்பாக ஆவணி மாதத்தில் வரும் இந்த சர்வ அமாவாசை தினத்தன்று நமது பித்ருக்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வதோடு, காக்கைக்கு உணவளித்து ஆசீர்வாதம் பெறுவது அவசியம் என்று கூறப்படுகிறது.

    இத்தகைய வழிபாடுகளால் பித்ரு சாபங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வினை அடையலாம் என்றும் கூறுகிறார்கள்.

    இந்த தினத்தில் வீட்டின் வாசலை சுத்தம் செய்யலாம், ஆனால் கோலமிட கூடாது.

    பெற்றோர் இல்லாத ஆண்கள் எள்ளும், தண்ணீரும் கொடுத்து கட்டாயம் தர்ப்பணம் செய்யவேண்டும்.

    நமது முன்னோர்களை நினைத்து இவ்வாறு வழிபாடு மேற்கொள்வதன் மூலம் வீட்டில் ஏழ்மை நிலை மாறுவதுடன், எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராமேஸ்வரம்
    குடிநீர்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    ராமேஸ்வரம்

    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் கடற்படை
    கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு யாழ்ப்பாணம்
    கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம் இலங்கை
    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு

    குடிநீர்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தமிழக தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு  தேனி
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025