NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சஸ்பெண்ட் செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சஸ்பெண்ட் செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்
    சஸ்பெண்ட் செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்

    எழுதியவர் Nivetha P
    Aug 21, 2023
    09:15 pm

    செய்தி முன்னோட்டம்

    சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நாச்சிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    சேலத்திலுள்ள ஓமலூர் அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் பணிபுரிந்து வருபவர் பேராசிரியர் நாச்சிமுத்து.

    இவர் இம்மாதத்தோடு ஓய்வு பெறவுள்ளார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இவர் மீது நிதி மோசடி, சரியாக மாணவர்களுக்கு பாடங்கள் எடுத்துரைப்பதில்லை, மாணவர்களை தகாத முறையில் பேசுகிறார் போன்ற பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.

    இந்த புகார்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணை 

    அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் 

    அதன்படி, முதற்கட்ட விசாரணையில் பேராசிரியர் மீது கூறப்பட்ட புகார்கள் அனைத்திலும் உண்மை தன்மை உள்ளது என்பது தெளிவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரான ஜெகநாதன், பேராசிரியர் நாச்சிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேலும் அவர் இது குறித்து கூறுகையில், "பேராசிரியர் நாச்சிமுத்து மீது கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள தனி விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழு விசாரணை நடத்த இடையூறு இல்லாமல் இருக்கவே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து, விசாரணை குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சேலம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சேலம்

    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி மாணவர்கள்
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  அரசு மருத்துவமனை

    தமிழ்நாடு

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  புதுச்சேரி
    முதல் பெண் யானை பராமரிப்பாளராக பெள்ளி: அரசு வேலை வழங்கிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
    இந்தியளவில் உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சையில் சிறந்த மாநிலம் என தமிழகத்திற்கு விருது இந்தியா
    மீண்டும் சென்னையில் அதிநவீன 'டபுள் டக்கர்' பேருந்து சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025