NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு துவங்கியது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு துவங்கியது 
    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு துவங்கியது

    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு துவங்கியது 

    எழுதியவர் Nivetha P
    Jul 15, 2023
    02:21 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகரவிளக்கு பூஜைக்களுக்கு திறக்கப்படும்.

    அதேபோல், மலையாள கருகிடக மாத பூஜை மற்றும் தமிழ் ஆடி மாத பூஜை ஆகியவற்றிற்கும் நடை திறக்கப்படும்.

    அதன்படி, நாளை(ஜூலை.,16) மாலை 5.30 மணியளவில் ஐயப்பன் கோயில் நடைத்திறக்கப்படவுள்ளது.

    இதன் காரணமாக தற்போது கோயிலினை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

    ஜூலை 21ம் தேதி வரை கோயில் திறந்திருக்கப்படும் பட்சத்தில் தினமும் வழக்கம் போல் பூஜைகள் நடப்பதோடு, இரவு 7 மணிக்கு படிபூஜைகளும் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி பக்தர்கள் முன்பதிவு வாயிலாக அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளதையடுத்து, இதற்கான முன்பதிவு sabarimalaonline.org என்னும் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் துவங்கியுள்ளது.

    பூஜை 

    ஆடி அமாவாசை - பம்பை ஆற்றில் பலி தர்ப்பணம்

    மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக செங்கனூர், பத்தனம், கோட்டயம், திட்டை, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகளை கேரள அரசு போக்குவரத்து கழகம் செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, ஆடி அமாவாசை வரும் ஜூலை 17ம் தேதி வருவதனையொட்டி பம்பை ஆற்றில் பலி தர்ப்பணம் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் நேற்று(ஜூலை.,14) திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    அதன்படி,ஆடி அமாவாசை என்பதால் இந்த பலி தர்ப்பணம் செய்ய கூடுதல் பூசாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், அன்றைய தினம் அதிகாலை 2.30மணி முதல் பம்பையாற்றில் இந்த தர்ப்பணம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை கோயிலில் ஆடிமாத புத்தரிசி பூஜையும் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    ஆடி

    சமீபத்திய

    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராஜதந்திர MPக்கள் குழுவில் யார் எங்கு செல்கிறார்கள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்! இந்தியா
    கார்த்திக் சுப்புராஜ்- சூர்யாவின் 'ரெட்ரோ' இந்த தேதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது நடிகர் சூர்யா
    மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து நியூயார்க்
    "நாங்களும் அனுப்புவோம்": இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் மற்ற நாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பவுள்ளதாம்! பாகிஸ்தான்

    கேரளா

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் ஆடிய வள்ளி கும்மியாட்டம் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல்  தமிழக அரசு
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்!  வந்தே பாரத்
    நடிகர் மம்மூட்டியின் தாயார் மறைவு - இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்  இந்தியா
    கேரளாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி

    ஆடி

    ஆடி காரில் சென்று டீ விற்கும் இளைஞர் - பின்னணி என்ன?  ட்ரெண்டிங் வீடியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025