NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா எப்படி முன்னெடுத்து செல்ல போகிறது: பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா எப்படி முன்னெடுத்து செல்ல போகிறது: பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்

    சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா எப்படி முன்னெடுத்து செல்ல போகிறது: பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 11, 2024
    12:43 pm

    செய்தி முன்னோட்டம்

    இரண்டு நாட்களுக்கு முன் ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் கேபினட் அமைச்சராக பதவியேற்ற பாஜக தலைவர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இன்று ஒரு

    இந்நிலையில், இன்று ஒரு நேர்காணலில் பேசிய அவர், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெறுவது, சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகளை முன்னெடுத்து செல்வது குறித்து விளக்கியுள்ளார்.

    "இது பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், மோடி 3.0 இன் வெளியுறவுக் கொள்கை மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்... எங்களைப் பொறுத்தவரை, இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக வளர்ந்து வருகிறது." என்று அவர் கூறியுள்ளார்.

    இந்தியா 

    "உலகில் இந்தியாவின் அடையாளம் நிச்சயமாக அதிகரிக்கும்"

    மேலும், தொடர்ந்து பேசிய அவர், "படிப்படியாக வளர்ந்து வருகிறது, இது நமது சொந்த உணர்வின் அடிப்படையில் மட்டுமல்ல, மற்ற நாடுகளும் அதை தான் நினைக்கின்றன. இந்தியா உண்மையிலேயே தங்கள் நண்பன் என்று பிற நாட்டினர் உணர்கிறார்கள். நெருக்கடி காலங்களில், உலகளாவிய தெற்குடன் நிற்கும் ஒரு நாடு இருந்தால், அது இந்தியாவாக தான் இருக்கும். ஜி 20 தலைவர் பதவியில் இருந்தபோது ஆப்பிரிக்க யூனியன் உறுப்பினர்களை நாங்கள் முன்வைத்தபோது, ​​​​உலகம் நம்மை நம்பியது மற்றும் எங்கள் பொறுப்புகளும் அதிகரித்து வருவதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். எனவே பிரதமர் மோடியின் தலைமையில், உலகில் இந்தியாவின் அடையாளம் நிச்சயமாக அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று கூறியுள்ளார்.

    இந்தியா 

     எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம்: எஸ்.ஜெய்சங்கர் 

    "எந்த நாட்டிலும், குறிப்பாக ஜனநாயகத்தில், ஒரு அரசாங்கம் தொடர்ச்சியாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்படுவது மிகவும் பெரிய விஷயமாகும். எனவே இன்று இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை நிறைய இருப்பதை உலகம் நிச்சயமாக உணர்ந்திருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் சீனாவைப் பொறுத்தவரை, அந்த நாடுகளுடனான உறவுகள் வேறுபட்டவை, மேலும் சீனாவைப் பொறுத்தவரை எங்கள் கவனம் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இருக்கும்."என்று அவர் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தீர்வு காண இந்தியா முயற்சிக்கும்.

    "பாகிஸ்தானுடன், பல ஆண்டுகளாக நிலவும் எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சினைக்கு நாங்கள் தீர்வு காண விரும்புகிறோம்..." என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    சீனா
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்ட கும்பல்: துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேர் கைது பாலிவுட்
    வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக பெரும் கூட்டத்தை நடத்தியது 'இண்டியா' கூட்டணி கட்சிகள்  பொதுத் தேர்தல் 2024
    பொது தேர்தல் கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் 1-3 இடத்தில் தாமரை மலரும்; மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்பு பாஜக
    ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு  ஆந்திரா

    வெளியுறவுத்துறை

    'பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய  அவசியம் நமக்கு இல்லை':  வெளியுறவுத்துறை அமைச்சர்  கனடா
    'இந்திய-ரஷ்ய உறவுகள் மிகவும் விதிவிலக்கானது': வெளியுறவுத்துறை அமைச்சர்  ரஷ்யா
    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க உயர் அதிகாரி அமெரிக்கா
    போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் ஒரு ராஜ்யசபா எம்.பியும் உள்ளார் இந்தியா

    சீனா

    சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை உயர்த்தத் திட்டமிடும் அமெரிக்கா அமெரிக்கா
    வீடியோ: வானில் இருந்து கீழே விழுந்து வெடித்த சீன ராக்கெட்  உலகம்
    2023-ல் 75 மில்லியன் வரை உயர்ந்த உலகளாவிய மக்கள் தொகை உலகம்
    சீனா: புதிய பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் கடற்படைத் தளபதி டாங் ஜுன் நியமனம் ஜி ஜின்பிங்

    பாகிஸ்தான்

    ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது  இந்தியா
    பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்: 10 போலீசார் பலி, 6 பேர் காயம் துப்பாக்கி சூடு
    பாகிஸ்தான் வேட்பாளர்கள் அலுவலகத்திற்கு வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலி குண்டுவெடிப்பு
    வெடிகுண்டு அச்சுறுத்தலுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் இன்று பாகிஸ்தானில் பொது தேர்தல் தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025