NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி 
    தெலுங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000 - தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி

    தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி 

    எழுதியவர் Nivetha P
    Nov 02, 2023
    05:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலங்கானா மாநிலத்தில் வரும் 30ம்.,தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மெடிக்கடா தடுப்பணைக்கு அருகிலுள்ள அம்பத்பள்ளி என்னும் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி.

    அப்போது பேசிய அவர், "தற்போதைய முதல்வர் கே.சந்திரசேகர ராவ், கொள்ளை அடித்ததாக கூறப்படும் பணத்தினை, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் திரும்ப கொடுக்க முடிவு செய்துள்ளது" என்று கூறினார்.

    தொடர்ந்து, "இப்போதைய முதல்வர் செய்த ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பதால் மாதந்தோறும் அவர்களுக்கு ரூ.4000 வரை வழங்கப்படும்" என்று தேர்தல் வாக்குறுதியினை அளித்துள்ளார்.

    இதில் "ரூ.2,500 நேரடியாக பெண்களின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும்" என்று கூறிய அவர், "மீதமுள்ள தொகையில் ரூ.500க்கு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்" என்றும் தெரிவித்தார்.

    ஆய்வு 

    மெடிக்கடா தடுப்பணையை ஆய்வு செய்தார் ராகுல் காந்தி 

    மேலும், ரூ.1,000க்கு, பெண்கள் அரசு பேருந்தில் இலவசமாக தங்கள் பயணத்தினை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்துள்ளார்.

    தெலங்கானா மக்கள், தங்கள் மாநிலத்தில் நடந்துவரும் ஊழல் ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைத்து, மக்களுக்கான ஆட்சியினை கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார், ராகுல் காந்தி.

    பிரதமர் மோடி போல், தான் வெறும் வாக்குறுதி மட்டும் கொடுக்கவில்லை, நிச்சயம் இவை அனைத்தையும், ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துவதாகவும் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

    இதனிடையே, மெடிக்கடா தடுப்பணையை ராகுல் காந்தி ஆய்வு மேற்கொண்டார்.

    அதன்பின்னர் அவர், அணையின் தூண்கள் தரமற்ற கட்டுமானம் காரணமாக விரிசல் விழுந்து நீரில் மூழ்கி கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து, காலேஸ்வரம் திட்டத்தினை முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களுக்கான ஏடிஎம்-ஆக பயன்படுத்தி வருவதாக கடுமையான விமர்சனத்தினை முன்வைத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    காங்கிரஸ்
    தெலுங்கானா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    ராகுல் காந்தி

    "இதயம் நொறுங்கியது" : மணிப்பூர் மக்களை சந்தித்த பிறகு ராகுல் காந்தி உருக்கம் மணிப்பூர்
    ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர்நீதிமன்றம்   கர்நாடகா
    ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி எதிரொலி - 12ம் தேதி அமைதி போராட்டம்  பாஜக
    ரயில் மறியல் எதிரொலி - கே.எஸ்.அழகிரி உள்பட 238 பேர் மீது வழக்குப்பதிவு  காங்கிரஸ்

    காங்கிரஸ்

    'சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் சந்தித்தது என்பது அப்பட்டமான பொய்': பாஜக எம்பிக்கு காங்கிரஸ் பதிலடி  பாஜக
    2024 மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட காங்கிரஸ் முடிவு மக்களவை
    'அனைத்து அரசு நிறுவனங்களும் RSS கையில் தான் இருக்கிறது': ராகுல் காந்தி இந்தியா
    படங்கள்: லடாக்கில் 'பைக் ரைடு' செய்த ராகுல் காந்தி  லடாக்

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து முதல் அமைச்சர்
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது டெல்லி
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா

    பிரதமர் மோடி

    மகாத்மா காந்திக்கு குடியரசு தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி  இந்தியா
    'தூய்மை இந்தியா' திட்டம்: 75% இந்திய கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தல் ஒழிக்கப்பட்டுள்ளது  இந்தியா
    நடிகர் விஷாலின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு, சென்சார் போர்டு பதில் தமிழ் திரைப்படம்
    பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025