NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகம், கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகம், கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு
    கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

    தமிழகம், கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு

    எழுதியவர் Nivetha P
    Feb 08, 2023
    03:45 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு-கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள-தமிழக எல்லையில் அமைந்துள்ள ஆனைக்கட்டி மலைப்பகுதிக்கு காரில் பயணம் செய்து சென்றுள்ளார்.

    அதன் பின்னர் அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

    இதனையடுத்து அவர் தனது காரினை அந்த பகுதியில் உள்ள தனியார் சர்வீஸ் சென்டருக்கு சுத்தம் செய்வதற்காக எடுத்து சென்று அங்கேயே விட்டு வந்துள்ளார்.

    அங்கிருந்த பணியாளர்கள் காரினை சுத்தம் செய்கையில் சுமார் 3 அடி நீளமுள்ள பறக்கும் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த பறக்கும் பாம்பானது மிகவும் அரிய வகையை சேர்ந்தது என்று கூறப்படுகிறது.

    அடர்ந்த காட்டுப்பகுதியில் விடப்பட்டது

    லாவகமாக பிடிக்கப்பட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது

    இந்நிலையில் காரில் இருந்த பாம்பினை கண்ட ஊழியர்கள் உடனடியாக பாம்பு பிடி வீரரான ரபீஸ் என்பவருக்கு தகவல் அளித்துள்ளார்கள்.

    சம்பவ இடத்திற்கு வந்த ரபீஸ் காரில் சிக்கியிருந்த அந்த அரிய வகை பறக்கும் பாம்பினை லாவகமாக பிடித்துள்ளார்.

    அதன் பின்னர் பிடிபட்ட பாம்பின் மீது செய்யப்பட்ட சோதனையில் அது மலை பகுதிகளில் உள்ள மரங்களில் வாழும் அரிய வகை பறக்கும் பாம்பு என்பது உறுதியானது.

    கார் உரிமையாளர் ஆனைக்கட்டி மலைப்பகுதிக்கு சென்று வந்துள்ள நிலையில், தவறுதலாக அப்பகுதியில் இருந்த இந்த பாம்பு காரில் விழுந்திருக்க கூடும் என்று கூறப்பட்டது.

    தொடர்ந்து பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் அடர்ந்த காட்டு பகுதியில் விடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    மாவட்ட செய்திகள்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா
    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! மாவட்ட செய்திகள்
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல் வாகனம்

    வைரல் செய்தி

    நான் ஓய்வு பெறுகிறேன்: தன்னுடைய மகனை நிறுவனங்களுக்கு வாரிசாக அறிவித்த லலித் மோடி மோடி
    நேபால் விமான விபத்து: விமான பணிபெண்ணின் கடைசி நிமிட டிக்டாக் வைரல் இந்தியா
    பிரிட்டிஷ் கவுன்சில் வேலையை உதறி டீக்கடை நடத்தும் பெண் இந்தியா
    வைரலாகும் வீடியோ: 71 வயது முதியவரை ரோட்டில் தரதரவென இழுத்து சென்ற பைக் ஆசாமி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025