NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு 
    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு

    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Aug 11, 2023
    12:47 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் காலி மனை பதிவின் பொழுது கள ஆய்வு எதுவும் நடத்தப்படுவதில்லை.

    இதனால் கட்டிடம் இருந்தும், அந்த நிலம் காலி மனை என கூறி பத்திரப்பதிவு செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

    இதனால் பத்திரப்பதிவு துறைக்கு வருவாய் இழப்பீடும் ஏற்படுகிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சார் பதிவாளர், பதிவுத்துறை துணை தலைவர், மாவட்ட பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்து உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.

    அதன்படி உத்தரவில், காலிமனை பத்திராபதிவின் பொழுது களஆய்வுகள் குறித்து பல சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது.

    எனினும், கட்டிடம் இருக்கும் நிலம் காலிமனை என பத்திரப்பதிவு செய்வது குறித்த புகார்கள் தொடர்ந்து எழுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    பதிவு

    சார்பதிவாளர்கள் மீது கடும் சட்ட ஒழுங்கு நடவடிக்கை பாயும்

    மேலும், இதனை தடுக்கும் பொருட்டு பத்திரப்பதிவின் பொழுது இணைக்கப்படும் மற்ற ஆவணங்களுடன் காலி நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.

    அனைத்து ஆவணதாரர்கள் மற்றும் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இதுகுறித்து அறியும்வகையில் அறிவிப்பு பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கட்டிடம் இருந்தும் களப்பணிகள் உள்ளிட்ட மற்ற ஆய்வுகளையும், ஆவணங்களையும் முறையாக சேகரிக்காமல் பதிவு செய்தால் சார்பதிவாளர்கள் மீது கடும் சட்ட ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் உத்தரவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சமர்பிக்கப்பட்டும் முன்பதிவு ஆவணங்களில் கதவு எண், குடிநீர் வாரிய எண், மின்சார இணைப்பு எண், போன்றவை இருந்தால் நிச்சயம் களப்பணி மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    எச்சரிக்கை

    சமீபத்திய

    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா

    தமிழ்நாடு

    தக்காளி விலை மீண்டும் உயர்வு; கிலோ ரூ.140 க்கு விற்பனை  தமிழ்நாடு செய்தி
    தமிழில் கையொப்பம் இடுவது கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு  பள்ளிக்கல்வித்துறை
    பாஜக மீண்டும் 2024ல் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருக்காது - மு.க.ஸ்டாலின் பேச்சு  மு.க ஸ்டாலின்
    திருவண்ணாமலை கிரிவலம்: ஆகஸ்ட் 1ஆம் தேதி சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும் திருவண்ணாமலை

    எச்சரிக்கை

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளம்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025