NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் நாளை நியாயவிலை கடைகள் வழக்கம்போல் இயங்கும் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் நாளை நியாயவிலை கடைகள் வழக்கம்போல் இயங்கும் 
    தமிழகத்தில் நாளை நியாயவிலை கடைகள் வழக்கம்போல் இயங்கும்

    தமிழகத்தில் நாளை நியாயவிலை கடைகள் வழக்கம்போல் இயங்கும் 

    எழுதியவர் Nivetha P
    Jul 29, 2023
    12:19 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் செப்டம்பர் 15ம்தேதி முதல் தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு 'கலைஞர் மகளிர் உரிமை தொகை' திட்டத்தின் படி, மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    அதன்படி அதற்கான விண்ணப்பப்படிவங்கள் பெறும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.

    விண்ணப்பங்களை பெறுவதற்கென தனியே சிறப்பு முகாம்களும் நியாயவிலை கடைகளின் அருகேயுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

    அதில் அவர், "சில நிர்வாக ரீதியான பணிகள் காரணமாக நாளை(ஜூலை.,30) ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது" என்றும்,

    "அதனை ஈடு செய்ய வரும் ஆகஸ்ட் 26ம்தேதி சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    விண்ணப்பம் 

    ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படாது

    மேலும், விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்வதினையொட்டி நாளை நியாயவிலை கடைகள் திறக்கப்படும் பட்சத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு 'கலைஞர் மகளிர் உரிமை தொகை' திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி தமிழக மகளிர் பயனடையவுள்ளனர் என்று முன்னதாக முதல்வர் கூறிய நிலையில், முதற்கட்ட விண்ணப்ப விநியோகமானது வரும் ஆகஸ்ட் 4ம் தேதியோடு முடிகிறது.

    அடுத்தகட்ட விண்ணப்ப விநியோகம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

    முதற்கட்டத்தில் 703 நியாயவிலை கடைகள் கொண்ட 98 வார்டுகளிலும், இரண்டாம் கட்டத்தில் 725 நியாயவிலை கடைகள் கொண்ட 102 வார்டுகளிலும் விண்ணப்ப விநியோகம் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்
    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு

    தமிழ்நாடு

    கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு  ஆடி
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    "அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின் ரெய்டு
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி

    மு.க ஸ்டாலின்

    திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்  கருணாநிதி
    தமிழக செயலாளர் இறையன்பு வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்  தமிழ்நாடு
    தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல்
    தமிழ்நாடு அரசுடன் மோதல் - 4 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025