NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் கத்தி முனையில் கடத்தப்பட்ட ராப் இசை கலைஞர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் கத்தி முனையில் கடத்தப்பட்ட ராப் இசை கலைஞர் 
    சென்னையில் கத்தி முனையில் கடத்தப்பட்ட ராப் இசை கலைஞர்

    சென்னையில் கத்தி முனையில் கடத்தப்பட்ட ராப் இசை கலைஞர் 

    எழுதியவர் Nivetha P
    Jun 22, 2023
    01:05 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை, திருவேற்காடு பகுதிக்கு சென்ற ராப் இசைக்கலைஞரான தேவ் ஆனந்த் கத்திமுனையில் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

    மதுரையை சேர்ந்த இசைக்கலைஞரான இவர், நேற்று(ஜூன்.,21)நுங்கம்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் ஹாலில் நடந்த 'வேல்ட் மியூசிக் டே' என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அந்நிகழ்ச்சி முடிந்த பிறகு, இவர் தனது 3 நண்பர்களை காரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினார்.

    அவரது கார் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ்-சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது, இருசக்கர வாகனம் ஒன்று கார்மீது மோதியது.

    இதனையடுத்து, காரிலிருந்த தேவ்'வின் நண்பர் ஒருவர் கீழே இறங்கி வாகனத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்திருக்கிறார்.

    இதனிடையே, அப்பகுதிக்கு மற்றொரு காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 10 பேர் கொண்ட கும்பல் தேவ் ஆனந்தினை கத்திமுனையில் கடத்தியதாக கூறப்படுகிறது.

    கடத்தல் 

    தேவ் ஆனந்தினை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபாடு 

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று இதுகுறித்து தகவல் அளித்தனர்.

    அவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    முதற்கட்ட விசாரணையில், தேவ் ஆனந்தின் சகோதரர் நிதி நிறுவனம் ஒன்றினை நடத்தியதில் ரூ.3 கோடி பணத்தினை மோசடி செய்தார் என்பது தெரியவந்தது.

    அதன் காரணமாகவே, அவர் கடத்தப்பட்டார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும், கடத்தப்பட்ட தேவ் ஆனந்தே தனது மொபைல் போனில் இருந்து அழைத்து கடத்தியவர்கள் தன்னை நல்ல நிலையில் தான் வைத்துள்ளார்கள் என்னும் தகவலினை அளித்துள்ளார்.

    தற்போது, போலீசார் தனிப்படை அமைத்து தேவ் ஆனந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கடத்தல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம் காவல்துறை
    சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி அரசு மருத்துவமனை
    கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி!  கலைஞர் கருணாநிதி
    துப்பாக்கிச் சுடுதலில் சர்வதேச வீராங்கனைகளை வீழ்த்தி தங்கம் வென்ற சென்னை மாணவி! துப்பாக்கிச் சுடுதல்

    கடத்தல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025